tamilnadu

img

பொன்னமராவதி அரசுப் பள்ளியில் குறுவட்ட அளவிலான விளையாட்டுகள்

பொன்னமராவதி, ஆக.28- புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் பொன் புதுப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில் திருமயம் குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.  விழாவிற்கு புதுக்கோட்டை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் தங்கராஜ் தலைமை வகித்து தேசியக் கொடியை ஏற்றி துவக்கி வைத்தார். விழாவில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் நிர்மலா வரவேற்றார். பொன்னமராவதி வட்டார கல்வி அலுவலர் ராஜேந்திரன் ஒலிம்பிக் கொடியை ஏற்றினார். பொன்னமராவதி வட்டார கல்வி அலுவலர் பால்டேவிட் ரொசாரியோ, வலம்புரி வடுகநாதன் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வன், பொன்னமராவதி வட்டார வள மைய மேற்பார்வையாளர் செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஓய்வு பெற்ற உடற்கல்வி இயக்குநர் ஜெகநாதன், குழிபிறை, வார்ப்பட்டு, ஆலவயல் உள்ளிட்ட அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் அரசு மகளிர் உடற்கல்வி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். மாணவர்களின் கலைநிகழ்ச்சி, தற்காப்பு கலைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து திருமயம் குறுவட்ட அளவில் சுமார் 45 பள்ளிகளின் 1500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இதில் முதலிடம் பெற்ற மாணவர்கள் புதுக்கோட்டை வருவாய் மாவட்ட போட்டியில் கலந்து கொள்ள தகுதியானவர்கள் என தகுதி சான்றும் வழங்கப்பட்டது. உடற்கல்வி ஆசிரியர் பொன்மணி நன்றியுரையாற்றினார்.