பாட்னா:
பாஜக - ஐக்கிய ஜனதாதளம் ஆளும், பீகார் மாநிலத்தில், மூளை க்காய்ச்சல் பாதிப்பால் 14 குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிப்பு கண்டறியப்பட்ட 38 குழந்தைகள், முசாபர்பூரில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், அவர்களில் 14 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோருக்கு ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு குறைவாக இருந்ததாக முசாபர்பூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.