tamilnadu

img

ஏழைகள் மீது அக்கறையற்ற கட்சி பாஜக - தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு

ஏழைகள் மீது அக்கறை கொஞ்சம் கூட அக்கறை  இல்லாத கட்சி என்று ராஷ்ட்ரீய ஜனதாதளக் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம் சாட்டி உள்ளார். 
நரேந்திர மோடி 2.0 ஆட்சியின்  ஓராண்டைக் கொண்டாட ஆயிரம் மெய்நிகர் பேரணிகளை நடத்த பாஜக முடிவெடுத்துள்ளது. இதுபற்றி ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் லல்லு பிரசாத் மகன் தேஜஸ்வி யாதவ்வை தொடர்பு கொண்டு கேட்டது.
அப்போது அவர் கூறுகையில், “நம் நாட்டில் மட்டுமல்ல உலகின் பணக்காரக் கட்சி பாஜகதான். ஆனால் பாஜக பணக்காரர்களைத்தான் கவனிப்பார்கள்.  ஏழைகளை அல்ல. சாமானிய மக்களை தேர்தல் சமயத்தில் வாக்குகளுக்காக மட்டுமே அவர்கள் அணுகுவார்கள்.
பிஹாரில் தனிமை மையங்கள் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை. தனிமைப்பிரிவுக்கு வரும் மக்களுக்கான வசதிகள் எதையும் செய்து தரவில்லை ஆளும் நிதிஷ் குமார் அரசு.
அரசு தங்கள் கடமைகளை நன்கு திட்டமிட்டு செய்ய முடியவில்லை எனில் எதிர்க்கட்சிகளின் உதவியை நாடியிருக்கலாம். , கோவிட்19 நெருக்கடியில் இத்தகைய மக்களுக்கு உதவுவது எதிர்க்கட்சிகளின் கடமையுமாகும்” என்றார் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.