tamilnadu

img

40 எம்எல்ஏக்களை வைத்து ஒன்றும் செய்ய முடியாது.... நிதிஷ்குமார் தானாகவே பதவியிலிருந்து விலகுவார்....

பாட்னா: 
பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில், மொத்தமுள்ள 243 இடங்களில், பாஜக - ஜேடியு கூட்டணி 125 இடங்களைப் பிடித்து, ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.எனினும், கடந்த தேர்தலை விட,பாஜக 20 இடங்களைக் கூடுதலாக வென்று, மொத்தம் 74 எம்எல்ஏ-க்களைப் பெற்ற நிலையில், ஜேடியுகட்சியோ, முன்பை விட 20-க்கும்மேற்பட்ட தொகுதிகள் குறைந்து, 43 இடங்களில் முடங்கிப் போனது. 

எனினும், முதல்வர் பதவியை ஜேடியு கட்சிக்கே, பாஜக விட்டுக்கொடுத்துள்ளது. பதவி கிடைத் தால் போதும் என்று, நிதிஷ் குமாரும் அதனை ஏற்றுக் கொண்டுள்ளார்.ஆனால், முன்புபோல நிதிஷ் குமாரால் சுதந்திரமாக செயல்பட முடியாது என்றும், பாஜகவினருக்கு கட்டுப்பட்டவராகவே அவர்இருக்க வேண்டும் என்றும் அரசியல் நோக்கர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில், ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியின் மூத்த தலைவர் மனோஜ் ஜா-வும் இதுதொடர்பாக பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.அதில், ‘‘வெறும் 40 எம்எல்ஏக்களை வைத்துள்ள ஒரு கட்சியின் தலைவர் எப்படி பீகார் முதல்வராக முடியும்?; இந்த தேர்தலில்நிதிஷ்குமாருக்கு எதிராகவே மக் கள் வாக்களித்து இருக்கிறார்கள்; ஆனால் அவரே மீண்டும் முதல்வர்என்றால், அதை எப்படி ஏற்பது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், “பீகாருக்கு விரைவில் வேறு ஒருவர் முதல்வர் ஆவார். தானாகவே அது நிகழும். ஒரு வாரத்திலோ, 10 நாட்களிலோ, ஒரு மாதத்திலோ நடைபெறும். ஆனால், அது நடந்தே தீரும்’’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.‘‘பீகாரைப் பொறுத்தவரை நிதிஷ் குமார் அசைக்க முடியாத தலைவராக இருந்து வந்தார். ஆனால் பாஜக சதி செய்து அவரைபலவீனமாக்கி விட்டது. எனவே, தேஜகூ தலைவராகவும், பீகார்முதல்வராகவும் நிதிஷ் குமார் தேர்ந்தெடுக்கப்படலாம். ஆனால்அவரை பின்னால் இருந்து சிலர்இயக்குவார்கள். அவர் சுதந்திரமாக செயல்பட முடியாது’’ என காங்கிரஸ் தலைவரான தாரிக் அன்வர் கூறியுள்ளார்.