சென்னை,ஜூலை 25- தமிழக அரசு பாலாறு தடுப்பணை தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்த வழக்குகளை விரைவுபடுத்த வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள ஒரு அறிக்கையில் 1892-ஆம் ஆண்டு சென்னை -மைசூர் மாகாணங்களுக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் 7-வது அட்டவணையில் குறிப்பிட்டபடி, பாலாறு பாயும் மாநிலங்களுக்கிடையே முன் அனுமதி பெறாமல் எவ்வித புதிய அணை கட்டு மானங்களோ, அணை தொடர்பான பணிகளோ மேற்கொள்ளக் கூடாது. கடந்த இரு வாரங்களாக ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே ராமகிருஷ்ணாபுரம், சாந்தி புரம், போகிலிரே, கிடிமாணி பெண்டா ஆகிய பகுதிகளில் உள்ள தடுப்பு அணைகளின் உயரத்தை அதிகரிக்கும் பணிகள் நடப்பதாகவும், போகிலிரே பகுதியில் ரூ.6 கோடி செல வில் தடுப்பு அணையை உயர்த்தி, கட்டுமானப் பணி தற்போது தொடங்கி நடந்து வருவதாகவும், பாலாறு பாது காப்பு சங்கத் தலைவர் ஏ.சி.வெங்கடேசன் தெரி வித்துள்ளார். ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே கட்டியுள்ள 22 தடுப்பு அணைகளையும் 40 அடி உயரம் வரை உயர்த்தத் திட்டமிட்டு இருக்கிறது. தமிழக அரசு பாலாறு தடுப்பணை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு களை விரைவு படுத்தாமல் இருந்தது கண்டனத்துக்கு உரியது. தமிழக அரசு உடனடியாக தக்க நடவடிக்கை மேற்கொண்டு பாலாற்றின் குறுக்கே உள்ள தடுப்பணை கள் உயரத்தை அதிகரிக்கும் ஆந்திர அரசின் நடவடிக்கை யைத் தடுக்க வேண்டும். மேலும் தடுப்பு அணைகள் அமைக்கும் முயற்சியை அனுமதிக்கக் கூடாது. இல்லை யேல் பாலாற்றில் இனி சொட்டு நீர் கூட கிடைக்காது என்பதை உணர்ந்து செயல்பட வலியுறுத்துகிறேன். இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.