tamilnadu

img

கல்வராயன் மலை மக்கள் ஆவேசம்

2500 ஏக்கர் வன நிலங்களை காப்புக் காடுகளாக அறிவிப்பதா?

கள்ளக்குறிச்சி, நவ.12- விழுப்புரம் மாவட்டம் கல்வராயன் மலையில் மலைவாழ் மக்கள் காலங் காலமாக அனுபவித்துவரும் வன நிலங்களை ‘காப்புக்’ காடுகளாக அறி வித்து வனத்துறை சட்ட விரோதமான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு எதிராக, அந்நிலங்களை அனுபவித்துவரும் மலைவாழ் மக்களுக்கே பட்டா வழங்க வேண்டும் எனக்கோரி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் கள்ளக்குறிச்சி வன எல்லை நிர்ணய அலுவலரிடம் மலைவாழ் மக்கள் மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்வராயன் மலையில் உள்ள பல்வேறு மலைக் கிராமங்களில் பல  தலைமுறைகளாக மலைவாழ் மக்கள் விவசாயம்  செய்து வாழ்ந்து வருகின்றனர்.  அந்நிலங்களை அனு பவித்து வரும் மலைவாழ் மக்களுக்கு பட்டா கொடுக்க வேண்டும் என்று கோரி  பலமுறை  போராட்டங்கள் நடத்தி உரிய அதிகாரிகளுக்கு மனு அளித்துள்ளனர். 2006 வன உரிமைச் சட்டப்படி பட்டா வழங்க வேண்டுமென தொடர்ந்து வலி யுறுத்தி வருகின்றனர். அப்போதெல் லாம் மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சி யர் உள்ளிட்ட அதிகாரிகள் எல்லாம் மலைவாழ் மக்களுக்கு சாதகமாக சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள் ளனர். இந்நிலையில் கடந்த 2019 மார்ச் 7 அன்று விழுப்புரம் மாவட்ட அரசிதழில் வனத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் வனத்துறை உத்தரவு ந.க.எண் 3/2154/2019 நாள் 13.2.19 மற்றும் ந.க.எண் 2450/2018 வ.நாள் 25.1.19ன்படி கல்வராயன்மலையில் உள்ள கரியாலூர், மாவடிப்பட்டு உள்பட பல்வேறு கிராமங்களுக்கு உட்பட்ட சுமார் 2500 ஏக்கர் மலை மக்க ளின் அனுபவ நிலங்கள் வன உரிமை சட்டம் 2006க்கு விரோதமாக ‘காப்புக்’ காடுகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

வன உரிமைச் சட்டம் 2006க்கு எதிரான இந்த அறிவிக்கையை திரும்பப்பெற வேண்டும் என்றும் மலை வாழ் மக்களின் அனுபவ உரிமையை அங்கீகரித்து பட்டா வழங்க வேண்டும் எனக்கோரியும் மேற்படி நிலங்களில் குடியிருந்து விவசாயம் செய்து வாழ்ந்து வரும் மலைவாழ் மக்கள் நவம்பர் 12  செவ்வாய்க்கிழமையன்று கள்ளக்குறிச்சியில் உள்ள வன எல்லை நிர்ணய அலுவலரிடம் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பெ.சண்முகம் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஏ.சரவணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலா ளர் டி.ஏழுமலை, சங்கத்தின் மாநிலப் பொருளாளர் ஏ.பொன்னுசாமி, மாநிலக்குழு உறுப்பினர் என்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.சுப்பிரமணியன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.வி.ஸ்டாலின் மணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்ட செயலாளர்கள் பி.மணி, டி.மாரிமுத்து, வை.பழனி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் வி.ஏழுமலை, ச.சசிகுமார், அ.பா.பெரியசாமி, சங்கத்தின் மாநில துணைத் தலைவர் வி.அண்ணாமலை, கல்வராயன்மலை செயலாளர் ஏ.செல்வராஜ், பொரு ளாளர் என்.கோவிந்தன் ஆகியோர் உள்ளிட்ட 2000-க்கும் மேற்பட்ட மலை வாழ் மக்கள் பங்கேற்றனர். இறுதியில் வன எல்லை நிர்ணய அலுவலரிடம் அனைவரும் மனு அளித்தனர்.