tamilnadu

img

ஆசிரியர் வாரியத்தின் போட்டித் தேர்வு தொடங்கியது

சென்னை, செப்.27- தமிழகத்தில் 2 ஆயிரத்து 144 முதுநிலை பட்டதாரி ஆசி ரியர் பணியிடங்களை நிரப்ப  ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித் தேர்வுகள்  தொடங்கின. தமிழகத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 144 முது நிலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் கிரேடு 1 ஆகிய காலிப் பணி யிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிப்பை ஆசிரி யர் தேர்வு வாரியம் கடந்த  ஜூன் 12-ஆம் தேதி வெளி யிட்டது. 8 திருநங்கைகள் உட்பட மொத்தம் 1 லட்சத்து  85 ஆயிரம் பட்டதாரிகள் தேர்வு எழுத விண்ணப்பித்தி ருந்த நிலையில் செப்.27 ஆம்  தேதி முதல் 29 ஆம்  தேதி  வரை தேர்வு நடைபெறு கிறது. இதற்காக தமிழ கத்தில் 154 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னையில் நந்தனம் டெம்பிள் டவர்ஸ் கட்டிடம், சைதாபேட்டை ஜி.ஆர். டவர்ஸ், கோடம்பாக்கம் நெடுஞ்சாலை ஆகிய இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் முறையாக கணினி வழியில் இந்த தேர்வு நடைபெறுகிறது.

மொத்தம் 17 பாடங்க ளுக்கு தினமும் காலை, பிற்ப கல் என இரு அமர்வுகளாக  தேர்வுகள் நடைபெறுகின் றன. 154 இடங்களில் மையங்  கள் அமைக்கப்பட்டிருந்தா லும், சென்னை மையங்க ளுக்கு தமிழகத்தின் பிற  இடங்களைச் சேர்ந்தவர்க ளும் வந்திருந்தனர். தேர்வில் முறைகேடு களை தவிர்க்க அனைத்து மையங்களிலும் கண்கா ணிப்பு கேமிராக்கள் பொருத்  தப்பட்டுள்ளன. குறிப்பிட்ட  நேரத்துக்குள் தேர்வு  அறைக்கு வந்துவிட வேண் டும். பெருவிரல் கைரேகை வைத்த பிறகு தான் மையத்துக்குள் தேர்வர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். பெண்கள் தோடு, வளை யல், கொலுசு, ஹை ஹீல்ஸ் செருப்பும், ஆண்கள் முழுக்கை சட்டை அணிந்து செல்லவும் அனுமதியில்லை கால்குலேட்டர், செல்ஃ போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை தேர்வு வாரியம் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளி யிடும். தகுதி பெற்றவர்கள் அடுத்ததாக, சான்றிதழ் சரிபார்ப்பு செயல்முறைக்கு அழைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.