tamilnadu

img

செப் 24-ல் சென்னை கோட்டை முற்றுகை

போக்குவரத்து ஓய்வூதியர் மாநில மாநாடு அறைகூவல்

திண்டுக்கல், ஆக.14- கோரிக்கைகைகளை வலியுறுத்தி செப்டம்பர் 24 ஆம் தேதி சென்னை கோட்டை யை முற்றுகையிட அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதியர் மாநில மாநாடு அறை கூவல் விடுத்துள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின்  5-வது மாநில மாநாடு திண்டுக்கல்லில் ஆகஸ்ட் 13,14 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு மாநிலத் தலைவர் எஸ்.கிருஷ்ணன் தலைமை வகித்தார்.  இம்மாநாட்டில் பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. போக்கு வரத்துக் கழகங்களில் பணி ஓய்வு பெற்ற வர்களுக்கு 2.44  மடங்கு உயர்வு வழங்கி அதன் அடிப்படையில் அடிப்படை ஓய்வூதியத்துடன் 5 சதவீத அகவிலைப் படியுடன் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. 1.1.2018-க்கு முன்பு ஓய்வு பெற்றவர்களுக்கு 119 சதவீதம் அகவிலைப்படியுடன் ஓய்வூதி யம் வழங்கப்படுகிறது. இது பாரபட்சமான அணுகுமுறையாகும். போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வூதியம் பெறு வதற்கிடையே 1.1.2018க்கு முன் 1.1.2018க்கு பின் என இரண்டு விதமான ஓய்வூதியம் வழங்குவது நியாயமற்ற நடவடிக்கை யாகும்.  இந்த பாரபட்சமான அணுகுமுறை நாட்டின் அரசியலமைப்பு சாசனத்திற்கு முரணானதாகும். ஆகவே 7-வது ஊதி யக்குழு சிபாரிசு அடிப்படையில் 1.1.2018க்கு முன்பு ஓய்வு பெற்றவர்களுக்கு 125 சதவீத அகவிலைப்படியை இணைத்து அடிப்படை ஓய்வூதியத்தில் 2.44 மடங்கு உயர்வு வழங்கி ஓய்வூதியத்தை திருத்தி அமைக்க வேண்டும். அனைத்து ஓய்வூதியர்களுக்கும் தற்போது கழக ஊழியர்கள் பெற்று வரும் அகவிலைப்படி, மருத்துவப்படியை வழங்க வேண்டும்.   போக்குவரத்து கழகங்களில் பணி யாற்றும் தொழிலாளர்களுக்கு வழங்கப் படும் அகவிலைப்படி சதவீதம் ஓய்வு பெற்றவர்களுக்கும் வழங்க வேண்டும் என்பது ஓய்வூதிய விதிகளில் உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 2015 நவம்பரிலிருந்து அகவிலைப்படி மாற்றம் செய்யாமல் 119 சதவீத அக விலைப்படியிலேயே பெற்று வருகின்றனர். சுமார் 45 மாதங்களாக ஓய்வூதியம் என்பது தொகுப்பு ஊதியம் போல் அகவிலைப்படி யை முடக்கி ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வருகிறது. இது ஓய்வூதிய விதிகளுக்கு புறம்பானது. ஓய்வூதியத் தொகை முடக்கப் படுவதால் கடுமையான விலையேற்றத்தை எதிர்கொள்ள முடியாமல் ஓய்வூதியர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள் ளது. விலைவாசி உயர்வினை கணக்கில் கொள்ளாமல் மூத்த தொழிலாளர்களை போக்குவரத்துக் கழகத்தின் முன்னேற்றத் திற்கு பெரும் சேவை செய்துள்ள ஓய்வூதி யர்களை வஞ்சிப்பது நியாயமானது அல்ல. எனவே 2015 நவம்பர் முதல் வழங்க வேண்டிய அகவிலைப்படிக்கான அரியர்ஸ் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். 

குடும்ப ஓய்வூதியர்களுக்கு  15 சதவீத உயர்வு 

குடும்ப ஓய்வூதியர்களுக்கு 1.9.2010-க்கு முன் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 15 சதவீத பென்சன் உயர்வு வழங்குவதாக அரசு நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டபடி 13.4.2015-ல் கையெழுத்தான 12-வது சம்பள ஒப்பந்தத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. 15 சதவீத பென்சன் உயர்வு 2018க்கு மேல் உயர்த்தி ஓய்வு பெற்ற தொழிலாளர்களு க்கு வழங்கப்படுகிறது.  ஆனால் 1.9.2010க்கு முன் ஓய்வு பெற்ற மற்றும் இறந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ஓய்வூதியம் பெறும் சகோதரிகளுக்கு இதுவரை இந்த உயர்வு வழங்கப்படவில்லை. இது அநீதியாகும். 2010 செப்டம்பருக்கு முன் ஓய்வு பெற்ற ஓய்வூதியர்களுக்கு 15 சதவீத உயர்வை முன் தேதியிட்டு  வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கும், குடும்ப ஓய்வூதியர்களுக்கும் 2015ம் ஆண்டு முதல் வழங்கப்பட வேண்டிய நிலுவை தொகையை வழங்க வேண்டும். 

மருத்துவக் காப்பீடு வேண்டும்
மருத்துவ காப்பீடு திட்டத்தை அமலாக்க வேண்டும். மருத்துவ தகுதியின்மை ஓய்வூதி யருக்கு பஸ் பாஸ் வழங்க அரசு முன் வரவேண்டும். இந்த கோரிக்கைகளை செப்டம்பர் 15 அண்ணா நினைவு தினத்திற்கு முன்னதாக வழங்க வேண்டும். அப்படி வழங்கவில்லை எனில் செப்டம்பர் 24 ஆம் தேதி சென்னை கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்த மாநாடு அறைகூவல் விடுத்துள்ளது. 

புதிய நிர்வாகிகள் 
மாநில மாநாட்டில் புதிய நிர்வாககிள் தேர்வு செய்யப்பட்டனர். மாநில தலைவராக எஸ்.கிருஷ்ணன், பொதுச்செயலாளராக கே.கர்சன், பொருளாளராக ஏ.வரதராஜன், துணை பொதுச்செயலாளர்களாக ஆர்.தேவராஜ், பி.செல்வராஜ், எம்.சண்முகம், ஆர்.வீரராகவன், பி.எஸ்.சம்மந்தம், மற்றும் 15 துணைத்தலைவர்களும், 16 துணைச் செயலாளர்களும் என 66 பேர் கொண்ட மாநிலக்கமிட்டி தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிய நிர்வாகிகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் மாநில பொதுச்செயலாளர் கே.ஆறுமுக நயினார் அறிமுகப்படுத்தி பேசினார். (நநி)