tamilnadu

img

4 நாட்களுக்கு படிப்படியாக மழை அதிகரிக்கும்

சென்னை, அக். 19- தமிழகத்தில் அடுத்த 4 நாள்க ளுக்கு மழை படிப்படியாக அதிக ரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்கு நர் கூறியதாவது: தென்கிழக்கு வங்கக் கடல்  மற்றும் அதையொட்டிய பகுதி களில் காணப்படும் குறைந்த காற்ற ழுத்தத் தாழ்வுப் பகுதி, மேல டுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சல னம் காரணமாக தமிழகம், புதுச்சேரி யில் அடுத்த 4 நாள்களுக்கு மழை  படிப்படியாக அதிகரிக்க வாய்ப்புள்  ளது. 

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை முதல்  அதிகனமழை வரை  பெய்யக் கூடும். நீலகிரி, கோவை, திண்டுக் கல், குமரி, நெல்லை மற்றும் டெல்டா பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் மிதமான மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி யில் அதிகபட்சமாக 13 செ.மீ. மழை  பதிவாகியுள்ளது. இதனால் அங்கு  54 இடங்களில் நிலச்சரிவு ஏற்  பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்  டத்தில் 7 செ.மீ. மழை பெய்துள் ளது. பலத்த காற்று மற்றும் கன மழை காரணமாக கேரளா, கர்நாடகா மற்றும் மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் 19, 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் மீன வர்கள் யாரும் கடலுக்குச் செல்ல  வேண்டாம் என்று அறிவுறுத் தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.