tamilnadu

img

பொங்கல்: அரசு விரைவு பேருந்துகளில் ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது

சென்னை, டிச.14- பொங்கல் பண்டிகை வருகிற ஜனவரி 15ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதை யொட்டி மக்கள் சொந்த ஊருக்கு செல்ல அரசு விரைவு பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. பெரும்பாலான பொது மக்கள் அரசு மற்றும் ஆம்னி பேருந்து களையே பெரிதும் நம்பியுள்ளனர். 300 கி.மீ தூரத்திற்கு மேற்பட்ட பகுதி களுக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் சொகுசு மற்றும்  ஏசி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.   திருச்சி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி நாகர்கோவில், கோவை, பெங்களூர், சேலம்  உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு 1200-க்கும்  மேற்பட்ட அரசு பேருந்துகள் இயக்கப்படு கின்றன.மேற்கண்ட அரசு விரைவு பேருந்து களில் 60 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்  பதிவு செய்யும் வசதி இருப்பதால் பயணி கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல டிக் கெட் முன்பதிவு செய்ய தொடங்கிவிட்டனர். இதுதொடர்பாக போக்குவரத்துக் கழக உயர் அதிகாரி கூறியதாவது:-

அரசு பேருந்துகளில் 60 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி  உள்ளது அடுத்த மாதம் பொங்கல் பண்டிகை  வரவுள்ளதால் டிக்கெட் முன்பதிவு செய்ய போக்குவரத்துக் கழகம் சார்பில் அனைத்து ஏற்பாடும் செய்யப்பட்டு உள்ளது. www.tnstc.in இணைய தளம் மட்டு மல்லாமல் www.redbus.in, www.busindia. com, www.paytm.com, www.goibibo.com ஆகிய இணையதளங்கள் வழியாகவும் பயணிகள் தங்களது டிக்கெட்டை எளிதாக முன்பதிவு செய்து கொள்ளலாம். அடுத்த 2 வாரங்களில் டிக்கெட் முன்பதிவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம் கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி தமி ழகம் முழுவதும் 7 ஆயிரம் சிறப்பு பேருந்து கள் இயக்கப்பட்டன.இந்த ஆண்டு இயக்கப்  படும் சிறப்பு பேருந்துகள் எண் ணிக்கை குறித்து விரைவில் போக்குவரத்து அதிகாரி கள் ஆலோசனைக் கூட்டம் நடத்தி அறிவிப்பு வெளியிடப்படும் என்றார்.