மும்பை, நவ. 8- ஆட்சியமைப்பதற்கான ஆதரவை பெறமுடியாததால் மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை ஆளுநரை சந்தித்து அவர் அளித்தார். மகாராஷ்டிர மாநில சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆட்சி அமைக்க 145 இடங்கள் தேவை. கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு 161 இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜ.க., சிவசேனா கட்சிகள் (105-56) ஆட்சி அமைப்பதில் 10 நாட்களுக்கும் மேலாக இழுபறி நீடித்தது. சிவசேனை தலைவர்கள் ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவைக் கோரி அதன் தலைவர்களை சந்தித்தனர். ஆயினும் அவர்கள் சிவசேனை ஆட்சியமைக்க ஆதரவு அளிக்க மறுத்துவிட்டனர்.
இதையடுத்து முதல்வர் பதவியை தலா இரண்டரை ஆண்டுகள் சுழற்சி அடிப்படை யிலும், அமைச்சர் பதவிகளை சரிசம மாகவும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற சிவசேனாவின் கோரிக்கையை பா.ஜ.க. ஏற்காததால் ஆட்சியமைக்க முடியாத நிலை நீடித்தது. இந்நிலையில், மகாராஷ்டிர மாநில முதல்வர் பதவியை தேவேந்திர பட்னாவிஸ் வெள்ளியன்று ராஜினாமா செய்தார். தேவேந்திர பட்னாவிஸ் தனது அமைச்சர்களுடன் மும்பை ராஜ் பவனுக்கு மாலையில் சென்றார். அங்கு அவர் ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி யை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்தார். தற்காலிக முதல்வராக நீடிக்கு மாறு பட்னாவிஸ்க்கு ஆளுநர் அறி வுறுத்தியதாக கூறப்படுகிறது. இதை யடுத்து, தற்காலிக முதல்வராக அவர் பதவி வகிப்பார் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
ஆளுநரை சந்தித்த பின் செய்தி யாளர்களிடம் அவர் கூறியதாவது, ‘ காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் பேசுவதற்கு மட்டும் நேரமுள்ளது. ஆனால் பாஜகவுடன் ஆலோசிக்க நேர மில்லை என புகார் கூறினார். மேலும் கடந்த காலங்களில் பலமுறை சிவசேனா கட்சி தங்களை அவமானப் படுத்தி உள்ளதாக பட்னாவிஸ் குற்றம் சாட்டினார். பிரதமர் நரேந்திர மோடி பற்றி சிவசேனா கட்சியினர் விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறினார். மகாராஷ்டிரா முதல்வர் பதவியை இரண்டரை ஆண்டு சிவசேனா கட்சிக்கு வழங்குவதாக ஒருபோதும் தாம் கூறவில்லை என தெரிவித்துள்ளார். மேலும் ஆட்சியில் சமபங்கு என்பது குறித்து தனது முன்னிலையில் சிவசேனா எந்த ஆலோசனையும் நடத்தவில்லை என்றும் எந்த உடன்பாடும் செய்ய வில்லை என்றும் கூறினார். ஆட்சி அமைப்பது தொடர்பாக உத்தவ் தாக்கரேவை பலமுறை தொலைபேசி யில் தொடர்பு கொண்டும் அவருடன் பேச முடியவில்லை என பட்னாவிஸ் தெரிவித்துளளார்.
முன்னதாக செய்தியாளர் அளித்த பேட்டியில் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறியதாவது:- முதல்வர் பதவியை சுழற்சி முறையில் 2½ ஆண்டுகள் தருவதாக ஒப்புக் கொண்டால் மட்டுமே பா.ஜனதா எங்களை அணுக வேண்டும். காபந்து அரசாக இருக்கும் பா.ஜனதா தனது பதவியை தவறாக பயன் படுத்தி புதிய அரசு அமைக்க முயற்சிக்கக் கூடாது.சட்டசபை பதவி காலம் முடிவடைவதால் பட்னாவிஸ் முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும். மத்திய அமைச்சர் நிதின் கட்காரி சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயை சந்திக்க வரபோவதாக எந்த தகவலும் வரவில்லை. மாநி லத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல் படுத்த நினைப்பது ஓட்டு போட்ட மக்களை அவமரியாதை செய்வதாகும் என்று கூறியுள்ளார்.