அரசு தலையிட விவசாயிகள் சங்கம் கோரிக்கை
சென்னை, ஏப்.20- பால் உற்பத்தியாளரிடம் விலையைக் குறைத்து தனி யார் நிறுவனங்கள் பால் வாங்கு கின்றன. இதனால் உற்பத்தியா ளர்கள் பெரும் சிரமப்படுகின்ற னர். இப்பிரச்சனையில் அரசு தலையிட்டு தீர்வுகாணக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநி லத் தலைவர் வி.சுப்பிரமணியன், மாநிலப் பொதுச்செயலாளர் பெ.சண்முகம் ஆகியோர் தமி ழக அரசின் பால்வளத்துறை செய லாளருக்கு அனுப்பியுள்ள கடி தத்தில் கூறியிருப்பதாவது:
ஊரடங்கு அமலுக்கு வந்த பிறகு தமிழ்நாடு முழுவதும் தனி யார் பால் நிறுவனங்கள் ஏற்க னவே வழங்கி வந்த கொள்முதல் விலையை விட லிட்டருக்கு 5 ரூபாய் குறைத்து வழங்குகின் றன. தமிழகத்தில் உற்பத்தியாகும் பாலில் பெரும்பகுதி தனியார் நிறுவனங்கள் மூலம் தான் கொள் முதல் செய்யப்படுகிறது. ஒரு நாளைக்கு பத்து லிட்டர் வழங் கும் உற்பத்தியாளர்கள் நாள் தோறும் 50 ரூபாய் இழக்க வேண்டி யுள்ளது. நாள்தோறும் கோடிக் கணக்கான ரூபாய் விவசாயி களுக்கு இழப்பு ஏற்படுகிறது.
லாரி போக்குவரத்து நிறுத்தப் பட்டதன் காரணமாக மாட்டுத் தீவன தட்டுப்பாடும், கடுமையான விலைஉயர்வையும் உற்பத்தி யாளர்கள் சந்திந்து வருகின்ற னர். இந்த நிலையில் ஏற்கனவே கிடைத்து வந்த விலையும் பாலுக்கு குறைக்கப்படுமென் றால் பெரும் சிரமத்திற்கு விவ சாயிகள் தள்ளப்படுவார்கள். எனவே, தாங்கள் தலையிட்டு அரசு பாலுக்கு தீர்மானித்த விலை உற்பத்தியாளர்களுக்கு கிடைப் பதை உத்தரவாதப்படுத்த வேண் டும். அத்துடன், மாட்டுத்தீவனம் தட்டுப்பாடின்றி நியாயமான விலையில் கிடைத்திட நடவ டிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.