tamilnadu

img

அரசு ஊழியர் சங்கம் சார்பில் நோய் எதிர்ப்பு சக்தி மருந்து வழங்கல்

தருமபுரி, ஜூலை 25- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முகக்கவசம், கபசுரக் குடிநீர் ஆகி யவை வழங்கும் நிகழ்ச்சியானது தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.  இந்நிகழ்ச்சிக்கு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எம்.சுருளிநாதன் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி துவக்கி வைத்தார். இந் நிகழ்ச்சியில் அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலை வர் ஜி.பழிணியம்மாள், மாவட்டச் செயலாளர் ஏ.சேகர், பொரு ளாளர் கே.புகழேந்தி, மாவட்ட நிர்வாகிகள் காவேரி, பிரபா கரன், மற்றும் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் ஜெமினி, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, ஹோமி யோபதி மருத்துவர் ரவிச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் என்.இராமஜெயம், கொளரி ஆகியோர் கலந்து கொண் டனர்.

;