tamilnadu

img

மத்திய அரசின் சிறப்புத் திட்டத்தால் திருப்பூர் பனியன் தொழிலாளர்களுக்கு ஏமாற்றம்

சிஐடியு கடும் விமர்சனம்

திருப்பூர், மே 15 – ரூ.20 லட்சம் கோடி மதிப்பில் மத்திய அரசு அறிவித்திருக்கும் சிறப்புத் திட்டத்தினால், திருப்பூரில் வாழ்விழந்து நிற்கும் பனியன் தொழிலாளர்களுக்கு எந்த பலனும் இல்லை என்று சிஐடியு பனியன் தொழிற்சங்கம் கூறியுள்ளது. இதுதொடர்பாக பனியன் மற்றும் பொதுத் தொழிலாளர் சங்க (சிஐடியு) பொதுச் செயலாளர் ஜி.சம்பத்  வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக பெரும் நெருக்க டியை சந்தித்து வருகிறது. இதனால் நாட்டு மக்களின் வாழ்வாதாரமும், தேசத்தின் பொருளாதாரமும் பின்ன டைவை சந்தித்து வருகிறது. இதி லிருந்து மீட்க பிரதமர் ரூ.20 லட்சம் கோடி அளவில் சிறப்புத் திட்டத்தை அறிவித்துள்ளார். அதன் அம லாக்கம் சம்பந்தமான விபரங்களை நிதி அமைச்சர் அறிவித்தார். இத் திட்டம் திருப்பூரில் பணியாற்றும் லட்சக்கணக்கான  தொழிலாளர் களுக்கு ஏமாற்றம் அளிப்பதாகவே உள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தில் ஆண்டுக்கு 55 ஆயிரம் கோடி ரூபாய் பங்களிப்பு செய்கிற தொழில் நகர மாக திருப்பூர் திகழ்கிறது. இதில் பணியாற்றும் சுமார் 5 லட்சம் தொழி லாளர்கள் வேலையில்லாமல், வரு மானம் இழந்து  கடந்த 50 நாட் களுக்கும் மேலாக பெரும் துயரத்தை சந்தித்து வருகிறார்கள். சுமார் 2லட்சம் புலம்பெயர்ந்த தொழி லாளர்கள் நம்பிக்கையிழந்து,  சொந்த ஊருக்கும் செல்ல முடியாமல் அனாதைகளைப் போல்  திருப்பூர் தெருக்களில் அலைந்து கொண்டி ருக்கும் அவலம் அன்றாட நிகழ்வாக மாறிப்போனது. இத்தகைய தொழி லாளர்கள் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை என்பது பெருத்த ஏமாற்ற மாகும்.

மேலும் பி.எப். சந்தா தொகை  12 சதவிகிதம் என்பதை 10 சதவிகி தம் என குறைத்திருப்பது தொழிலாளர் களுக்கு இழப்பையே ஏற்படுத்தி யுள்ளது. மேலும் தற்போது பல கட்டுப் பாடுகளுடன் ஊரடங்கு தளர்த்தப் பட்டு, நிபந்தனைகளுடன் நிறுவனங் கள் இயங்கலாம் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. இதனால் மிகக்குறைந்த அளவிலேயே தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். ஊரட ங்கு முழுமையாக நீக்கப்பட்டாலும் கூட மூன்று மாத காலத்திற்குப் பிறகுதான்  பனியன் நிறுவனங்கள் முழு திறனுடனும், தொழிலாளர் களுடனும் இயங்க முடியும். எனவே பி.எப். பங்களிப்பை மேலும் மூன்று மாத காலத்திற்கு அரசு  செலுத்தும் என குறிப்பிடும் காலஅளவு பெரும் பகுதி தொழிலாளர்களுக்கு வேலை இல்லாத காலமாகவே இருக்கப் போகிறது. ஆகவே பி.எப். மூலமும்  பனியன் தொழிலாளர்கள் பலனடை யப் போவதில்லை.  எனவே இது வரையிலான மத்திய அரசின் அறிவிப்புகள், பனியன் தொழிலாளர்களை பொறுத்த வரையில் சுயசார்பு இந்தியாவை கனவு காணும் வெற்று அறிவிப்பு களாகும். இனி வரும் அறிவிப்புகளி லாவது வாழ்விழந்து நிர்க்கதியாய் நிற்கும் ஏழை தொழிலாளர்களுக்கு மத்திய அரசு குறைந்த பட்சம் மாதம்  ரூ.7500 நிவாரணம் அளிக்கவேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள் ளார்.