உளுந்தூர்பேட்டை, மே 3- உளுந்தூர்பேட்டையைச் சுற்றியுள்ள கொரட்டூர், இருந்தை, மாரனோடை, கொரட்டங்குறிச்சி, பிள்ளையார்குப்பம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் மற்றும் கூலித் தொழிலாளர்கள் சென்னை கோயம்பேடு பகுதி யில் பணிபுரிந்து வந்தனர். ஊர டங்கின் காரணமாக அங்கே மாட்டிக்கொண்ட பலர் பல்வேறு சிரமங்களுக்கிடை யில் அப்பகுதி யிலேயே இருந்தனர். கொரானோ தொற்று பரவிய நிலையில் கோயம்பேடு காய்கறி சந்தை மூடப்பட்டது.
ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் அங்கு பணி புரிந்து வந்த தொழிலாளர் கள் அத்தி யாவசிய பொருட்களை ஏற்றி வரும் லாரிகள் மற்றும் கால் நடையாக அங்கிருந்து சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர். இதில் சனிக்கிழமையன்று (மே 2) இருந்தை கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கும், பெரியமார னோடை கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டு பிடித்து உடனடியாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதே கிராமத்தில் மேலும் 5 பேருக்கு கிருமித்தொற்று உறுதி யானது. அவர்களும் முண்டி யம்பாக்கம் அனுப்பி வைக்கப் பட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாவட்ட நிர்வாகம் இக்கிராமங்களில் தடுப்புகள் அமைத்து தனிமைப்படுத்தி யுள்ளது. சுகாதாரத்துறை சார்பில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் களமிறக்கப்பட்டு தூய்மை பணியாளர்களால் கிருமி நாசினி தெளிப்பது உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. கொரட்டங்குறிச்சியை சேர்ந்த 24 பேர் களமருதூர் அரசு பள்ளியில் தனிமைப் படுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மேற்கண்ட மூன்று கிராமங்களைச் சேர்ந்த சுமார் 60-க்கும் மேற்பட்டோர் சனிக்கிழ மையன்று நள்ளிரவு 12 மணிக்கு வாகனங்களில் ஏற்றப்பட்டு உளுந்தூர்பேட்டை ஒன்றியத்தி லுள்ள குமாரமங்கலம் அரசு மாதிரி பள்ளியில் தனிமைப்ப டுத்தி வைக்கப்பட்டனர்.
ஆனால், ஞாயிற்றுக்கிழமை காலையில் உணவு என்ற பெய ரில் சிறிது பொங்கல் போன்ற சாதம் பொட்டல மாகக் கட்டி பாத்திரத்தில் வைக்கப்பட்டு கேட்டிற்கு வெளியே இருந்து உள்ளே தள்ளப் பட்டுள்ளது. இந்தப் பார்சலில் ஊறுகாய்கூட இல்லை என அவர்கள் குற்றம் சாட்டினர். தண்ணீர் வசதி இல்லாத தால் தனிமைப்படுத்தப் பட்ட வர்கள் காலைக் கடன்களை கழிப்பதற்குகூட இயலவில்லை. உடனடியாக அங்கு அடைக்கப் பட்டுள்ள சிலர் நிலைமைகளை சமூக வலைத்தளங்கள் மூலம் வீடியோ எடுத்து பதிவு செய்தனர். இதன் விளைவாக உளுந்தூர் பேட்டை சட்டமன்ற உறுப்பினர் இரா.குமரகுரு அங்கு சென்று அவர்களிடம் அமைதியாக இருக்குமாறு கூறியுள்ளார். ஆனால் ஆத்திரத்தில் இருந்த தொழிலாளர்கள் உணவு பொட்டலங்களை பிரித்து காட்டி இதை எப்படி சாப்பிடுவது என கேட்ட போது பதில் ஏதும் தெரி விக்காமல் சட்டமன்ற உறுப்பி னர் அலட்சியமாக திரும்பிவிட்டா ராம். பின்னர் சமூக ஆர்வலர் சிலர் பிஸ்கட் பாக்கெட்டுகளும், தேனீரும் கொண்டு சென்று அளித்துள்ளனர்.
“ஒரு நாள் முழுவதும் கவ னிப்பாரற்று ஒரு பெண் உள்பட 60 க்கும் மேற்பட்டோர் மனித நேயம் இன்றி உணவு கூட வழங் கப்படாமல் இருந்துள்ளது வேத னையானது” என இருந்தை கிரா மத்தின் சிபிஎம் கிளைச் செய லாளர் ஆரோக்கியதாஸ் கூறி னார்.
தகவலறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் டி.ஏழு மலை, இம்முகாமில் தங்க வைக் கப்பட்டுள்ள 60க்கும் மேற்பட் டோருக்கும் உடனடியாக தரமான உணவு மற்றும் தண்ணீர் உள்ளிட்ட கழிப்பறை வசதி ஏற்ப டுத்தி தர வேண்டும் என கள்ளக் குறிச்சி மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளார்.
-வி.சாமிநாதன்