tamilnadu

img

5, 8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ரத்து: கல்வியாளர்கள் வரவேற்பு

சென்னை, பிப். 5- தமிழகத்தில் பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் பொதுத்தேர்வு  ரத்து செய்யப்படும் என்ற அறி விப்புக்கு கல்வியாளர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் என  அனைத்து தரப்பினரும் வர வேற்பு தெரிவித்துள்ளனர். வே.வசந்திதேவி, முன்னாள்  துணைவேந்தர்: பெற்றோரும், மாணவர்களும் பெரும் குழப்பத்  தில் இருந்த நிலையில் அவர்க ளுக்கு ஆறுதல் அளிக்கும் வகை யில் அரசு முடிவெடுத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. பொதுத் தேர்வு நடைபெற்றால் தமிழக மெங்கும் தனியார் பயிற்சி மையங்  கள் உருவாகும். பாடங்களை மாணவர்கள் போராடி மனப்பாடம்  செய்ய நேரிடும். அனைத்து குழந்  தைகளுக்கும் ஒரே மாதிரியான தேர்வு நடத்துவதன் மூலம் அவர்க ளின் திறமையைக் கண்டு பிடிக்கவே முடியாது. மாறாக, சமூகத்தை எதிர் கொள்வதற்கான திறன்கள், சக மாணவர்களுக்கு உதவி  செய்தல், சிந்திக்கும் வகையி லான கேள்விகளை எழுப்புதல்,  பெற்றோர் ஆசிரியரிடம் குழந்தை களின் அணுகுமுறை ஆகியவை குறித்து குழந்தைகளுக்கு பயிற்சி யளித்து அதற்கேற்றவாறு மதிப்  பெண்களை வழங்கலாம். முன்ன தாக இந்த விஷயங்கள் குறித்து ஆசிரியர்கள் சிறந்த முறையில் பயிற்சியளிக்க பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிரின்ஸ் கஜேந்திரபாபு: தமி ழக அரசின் இந்த அறிவிப்பு  தேர்வெழுதும் மாணவர்க ளுக்கான மிகப்பெரிய நிவாரண மாக இருக்கும். மக்களாட்சியின் மாண்புக்கு மரியாதையளித்து, அனைத்து தரப்பினரின் கோரிக்கையை ஏற்று மிகச் சிறந்த  முடிவை எடுத்த அரசுக்கு நன்றி.  பொதுத்தேர்வு ரத்து செய்யப் பட்ட அதே வேளையில் அந்த வகுப்புகளுக்கு தற்போதுள்ள முறையை மேலும் வலுப்படுத்தி அதில் முழுமையான மதிப்பீட்டு முறையை கடைபிடிக்க வேண்டும். இது தொடர்பாக ஆசி ரியர், பெற்றோர் மாணவர் அமைப்புகள் கலந்தாலோசித்து ஒரு மகிழ்ச்சிகரமான பள்ளிச்  சூழலை ஏற்படுத்தி குழந்தை களின் திறனுக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும். செ.அருமைநாதன், மாண வர்-பெற்றோர் நலச்சங்கம்:  நீண்ட யோசனைக்குப் பிறகு  அரசு எடுத்த இந்த முடிவு வர வேற்கத்தக்கது. அதேவேளை யில் கல்வித்துறையில் மாறி, மாறி முடிவெடுப்பதால் பெற்றோரும், மாணவர்களும் மன உளைச்ச லுக்கு ஆளாகின்றனர். கல்வித் துறையின் மீதான நம்பிக்கை கேள்விக்குறியாகிறது. ஆசிரி யர்களின் திறனை வெளிப்ப டுத்தச் செய்ய எத்தனையோ வழி முறைகள் இருக்கும்போது, பொதுத்தேர்வு நடத்தினால்தான் ஆசிரியர்களின் திறனை அறிய முடியும் என்று கூறுவது சரியல்ல.  தற்போது எடுத்துள்ள இந்த முடி வில் அரசு உறுதியாக இருந்து மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்த வேண்டும்.

;