tamilnadu

img

உலக உணவுத்திட்ட அமைப்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு

2020 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு  இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இந்நிலையில் 2020 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு துறை வாரியாக கடந்த அக்.5 திங்கள் கிழமை முதல் அறிவிக்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில் 2020ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு ஐ.நா.சபையின் உலக உணவு திட்ட அமைப்புக்கு வழங்கப்படுகிறது.

இத்தாலி நாட்டின் ரோமை தலைமையிடமாக கொண்ட உலக உணவு திட்ட அமைப்பு 83 நாடுகளில் 9 கோடிப் பேருக்கு உணவு வழங்கி பசிப்பிணிப் போக்குதல் மற்றும் போரைத்தவிர்த்து அமைதியை காப்பதால் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.