tamilnadu

img

முதுமலையில் ஒரு மணி நேரம் புல்தரையில் விளையாடிய புலி... அமைதியாக கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக பெய்து மழையால் , மாவட்டம் முழுவதும் பச்சை பசேலென காட்சி அளிக்கிறது. குறிப்பாக முதுமலை புலிகள் காப்பகத்தில் தொடர்ந்து பெய்த மழையால் , பசுமை நிறைந்து காணப்படுகிறது. இந்நிலையில் இன்று மாலை சுமார் 5 மணி அளவில் வாகன சவாரி மூலம் முதுமலை புலிகள் காப்பகத்தில் சுற்றுலா பயணிகள் அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது கிராஸ்கட் வனப்பகுதி சாலை ஓரத்தில் உள்ள புல்வெளியில் , 10 வயது மதிக்கத்தக்க ஆண் புலி ஒன்று ஒய்யாரமாக சில மணி நேரம் ஓய்வு எடுத்தது. அதன்பின் புல்வெளியில் அங்கும் இங்கும் திரும்பியவாறு, சற்று நேரம் சுற்றுலா பயணிகளை கூர்ந்து நோக்கியது. இருப்பினும் சுற்றுலாப் பயணிகளை பொருட்படுத்தாத அந்த புலி சில மணி நேரம் அப்பகுதியில் அமர்ந்தவாறு புகைப்படங்களுக்கு பல்வேறு போஸ் கொடுத்தது. இதைத்தொடர்ந்து கம்பீரமாக எழுந்து நின்ற அந்த புலி , ஒய்யாரமாக  வனப்பகுதிக்குள் நடந்து சென்றது. சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக ரம்மியமாக சுற்றுலாப் பயணிகளுக்கு காட்சியளித்த அந்த புலியை கண்டு சுற்றுலாப் பயணிகள், அமைதியாக கண்டு ரசித்தன