tamilnadu

img

மைதானத்திற்கு செல்ல நிரந்தர பாதை அமைக்க கோரிக்கை

உதகை, டிச. 10- கூடலூர் பகுதிக்கு உட்பட்ட தொரபள்ளி கிராமத்தில் வசிக்கும்  30க்கும் மேற்பட்ட  விளையாட்டு வீரர்கள் மைதானத்திற்கு செல்ல நிரந்தர பாதை அமைத்து தரக்கோரி  திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் மனு அளித்தனர்.  இம்மனுவில் கூறியிருப்பதாவது, கடந்த 20 வருட காலமாக ஸ்போர்ட்ஸ் கிளப் மூலம் கூடலூர் கிராமம் தொரபள்ளி விளையாட்டு மைதானத்தில் பல போட்டிகள் நடத்தி விளையாடி வருகிறோம். இந்த மைதானத்திற்கு செல்ல  வாகன சோதனை சாவடி அருகில் உள்ள நடைப்பாதையை பயன்படுத்தி வந் தோம். தற்போது கடந்த 6 மாதங்க ளாக தனிநபர் ஒருவர் வேலி அமைத்து, நடைப்பாதையை அடைத்து  விட்டார். இதனால் அருகில் இருக்கும் வனத்தின் குறுகிய பாதை வழியாக சென்று வந்தோம். ஆனால் வனத் துறையினரும் இந்த வழியாக செல்ல அனுமதிப்பதில்லை. இதனால் மைதானத்திற்கு சென்று பயிற்சிகளில் ஈடுபடவும், விளையாட்டு போட்டி கள் நடத்தவும் முடியாத சூழல் ஏற்பட் டுள்ளது. மேலும் இந்த மைதானம் குண்டும் குழியுமாக உள்ளதாகவும், விளையாட்டு மைதானத்திற்கு செல்ல நிரந்தர நடைபாதை அமைத்து தர வேண்டும் என்றும் அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.