உதகை, செப். 15 - உதகை அருகே இரண்டு ஆண் டுகளாக மூடப்பட்டுள்ள தொழிற் சாலையை, தொழிலாளர்கள் நலன் கருதி மீண்டும் திறக்க வலியு றுத்தி சிஐடியு தொழிற்சங்கத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடு பட்டனர். நீலகிரி மாவட்டம், சோலூர் பேரூராட்சிக்குட்பட்ட சாண்டிந ல்லா கிராமம் உதகை - கூடலூர் சாலையில் அமைந்துள்ளது. இப்பகுதில் ஸ்டெர்லிங் பயோ டெக் லிமிடெட் என்று தொழிற் சாலை இயங்கி வந்தது. இந்த தொழிற்சாலையில் விலங்குக ளின் எலும்புகளை ரசாயன முறைக்கு உட்படுத்தி கால்சியம் பிரிக்கப்படுகிறது. இத்தொழிற் சாலை நிர்வாகம் உற்பத்தியை அதிகபடுத்தி, தொடர்ந்து லாபம் ஈட்டி வந்த நிலையில்,அதிலி லிருந்து வெளியேறும் கழிவு களை முழுமையாக சுத்திகரிக்க போதுமான கட்டமைப்பு வசதி களை செய்யவில்லை.
இதை யடுத்து, தமிழ்நாடு மாசுக்கட்டுப் பாட்டு வாரியம் அவகாசம் அளித் தும் மெத்தனம் காட்டி வந்தது. இதனால், கடந்த 2018 ஆண்டு ஜூன் 28 ஆம் தேதியன்று இந்நி றுவனத்தின் மின் இணைப்பை மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் பரிந்துரையின் பேரில் மின்வாரி யம் துண்டித்தது. இதனால் உற்பத்தி நிறுத்தப்பட்டு, தொழிற் சாலை மூடப்பட்டது. இருந்தும், நிர்வாகம் ஜூலை 1 முதல் செப்டம்பர் 19 வரை தொழி லாளர்களுக்கு முழு ஊதியம் வழங் கியது. மேலும், அதே ஆண்டில் செப். 20 ஆம் தேதியன்று அங்கீ கார சங்கமான ஏஐடியுசி தொழிற் சங்கமும், தொழிற்சாலை நிர்வாக மும் இணைந்து லேஆப் வழங்க ஒப்பந்தம் போட்டது. இதனால் அடிப்படை சம்பளம் மற்றும் பஞ் சப்படியில் 50 சதவிகிதம் மட் டுமே இன்று வரை தொழிலாளிக ளுக்கு வழங்கப்படுகிறது.
இந்த ஊதியத்திலும் தொழிலாளர் வருங் கால வைப்பு நிதி, ஆயுள் காப்பீட்டு மாத பிரீமியம், தொழிலாளர் கூட் டுறவு சொசைட்டி சந்தா பிடித் தம் செய்யப்படுகிறது. அதேபோல் பணியிலிருந்து ஓய்வு பெற்ற தொழிலாளிகள் மற்றும் மரண மடைந்த தொழிலாளிகள் ஆகி யோருக்கு பணிக்கொடை உள் ளிட்ட பண பயன்கள் வழங்க வில்லை. மேலும், இத்தொழிற் சாலையில் 400க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபரிவதால் தமிழக அரசின் முன் அனுமதி பெறாமலும் எவ்வித முன்னறி விப்பு செய்யாமலும், நஷ்ட ஈடு வழங்காமலும் இந்த ஆலையை மூடியது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக தொழிலாளர் நலத் துறை அலுவலரிடம் சிஐடியு பல முறை பேச்சு வார்த்தை நடத்தியும் பலன் இல்லை. இதனால் பாதி சம் பளம் பெற்று கொண்டு தொழிலா ளர்கள் குடும்பம் நடத்த முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே, தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு முழுஊதியம் வழங்க வேண்டும். இல்லையென்றால், மீண்டும் தொழிற்சாலையை திறந்து உற்பத் தியை துவக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி திங்களன்று சிஐடியு தொழிற்சங்கத்தினர் தொழிற்சாலையை முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட னர். இந்த போராட்டத்திற்கு ஸ்டெர்லிங் பயோடெக் ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ்.ராஜரத்னம் தலைமை வகித்தார். இதில், சங்கத்தின் செயலாளர் கே.சந்தரசேகர், யூ.மூர்த்தி, முன்னாள் பொதுச்செயலாளர் கே.ராஜேந்திரன், சிஐடியு மாவட்டத் தலைவர் கே.சுந்தரம், உள்ளாட்சி மற்றும் நகராட்சி ஊழி யர் சங்கத்தின் தலைவர் எல்.சங்க ரலிங்கம், சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினர் ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.