உதகை, நவ.1 - உதகையில் குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் உள்ள கால்வாய் அடைப்பை சரி செய்ய அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்னர். நீலகிரி மாவட்டம், உதகை, ஏடிசி பகுதி யில் உள்ள கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக கழிவுநீர் தேங்கி கொசு உற்பத்தியாகிறது. மேலும், மழைக்காலங்களில் வெள்ளம் வெளியேற வழியில்லாமல் சாலையில் வழிந்தோடு கிறது. இதனால் வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டுநர்கள் அவதிய டைகிறார்கள். எனவே கால்வாய் அடைப்பை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.