tamilnadu

img

நுண் நிதி நிறுவனங்களின் அடாவடிதனத்தைக் கண்டித்து மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

நுண்நிதி நிறுவனங்கள் அடாவடியாக கடன் வசூலிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். நூறு நாள் வேலைத்திட்டத்தை 200 நாட்களாக அதிகரிக்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி நீலகிரி மாவட்டத்தில் உதகை, கோத்தகிரி, கூடலூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பகுதிகளில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். இதில், சங்கத்தின் மாவட்ட செயலாளர் டி.ஏ.சாந்தா அப்புகுட்டன், மாவட்ட உதவித் தலைவர் லீலா வாசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.