tamilnadu

img

குடியிருப்புகளுக்கு நடுவே கொரோனா சிகிச்சை மையம்- பொதுமக்கள் எதிர்ப்பு

உதகை, ஜூலை 27 - உதகையில் குடியிருப்பு களுக்கு மத்தியில் செயல்ப டும் தற்காலிக கொரோனா சிகிச்சை மையத்தை வேறு பகுதிக்கு மாற்றிட அப்பகுதி மக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில், கொரோனா நோய்த்தொற் றின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகி றது. இதனால் அரசு மருத்து வமனை மட்டுமின்றி தனியார் பள்ளி கள் மற்றும் விடுதிகளை மாவட்ட நிர்வாகம் தற்காலிக சிகிக்சை மையங்களாக பயன் படுத்தி வருகிறது. இந்நிலையில், உதகை அரசு கலைக் கல்லூரி அருகில் உள்ள ஸ்டோன் ஹவுஸ் பகுதியில் உள்ள விடுதி யில் தற்பொழுது நோய்த்தொற்று பாதித் தவர்கள் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இந்நிலையில், அப்பகுதியிலுள்ள பொதுமக்கள், இந்த சிகிச்சை மையத்தால் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் உள் ளிட்ட அனைவருக்கும் நோய்த்தொற்று பர வும் அபாயம் உள்ளது. எனவே, மாவட்ட ஆட்சியர் இம்மையத்தினை வேறு இடத் திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

;