tamilnadu

நெல்லியாளத்தில் வளர்ச்சிப் பணிகளை ஆட்சியர் ஆய்வு

நீலகிரி, அக். 26- நெல்லியாளம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.57.50 மதிப்பில் நடைபெற்ற பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நீலகிரி மாவட்டம், நெல்லியாளம் நகராட்சிக்குட்பட்ட அம்மைகுளம் அங்கன்வாடி மையத்தில் மாநில பேரிடர் மறுமொழி நிதி திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் மதிப்பில் பரா மரிப்பு பணிகளும், கீழ்நாடுகாணி ஆதிதிராவிடர் காலனி பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் மதிப்பில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இதே போல், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பில் கத்திமட்டம் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டுள்ளது.

மேலும், சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் ரூ.6 லட்சம் மதிப்பில் பந்தலூர் முருகன் கோவில் பகுதியில் நடைபெற்ற குடிநீர் குழாய் பணிகள் நடைபெற்று வருகி றது. இப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  மேலும், பொது நிதி திட்டத்தின் கீழ் ரூ.6.50 லட்சம் மதிப் பில் பொன்னம்மா பாலம் ஆதிவாசி குடியிருப்பு பகுதி சாலை பணி உள்ளிட்ட ரூ.57.50 லட்சம் மதிப்பில் நடைபெற்ற பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டார். இந்நிகழ்வில், கூடலூர் கோட் டாட்சியர் ராஜ்குமார், நெல்லியாளம் நகராட்சி ஆணையா ளர் வெங்கடாச்சலம் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.