tamilnadu

சாலையில் சுற்றிய கரடி

 உதகை, ஜூலை 17- நீலகிரி மாவட்டம், மஞ்சூர் கைகாட்டி சாலை யில் கரடி செல்வதைப் பார்த்த அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். சிறிது தூரம் சாலையில் ஓடிய கரடி தனியார் எஸ்டேட் டுக்குள் புகுந்து விட்டது. இச்சாலையின் வழியாக தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், மாண வர்கள் தினமும் செல்வ தால், சாலையில் நடமாடும் கரடிகளை அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வேண் டும் என்று பொது மக்கள் வனத் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.