tamilnadu

img

உதகை மண்சரிவில் 7 பேர் உயிரிழப்பு - 4 பேர் கைது

உதகையில் கட்டுமான பணியின்போது, திடீரென ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 6 பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்த சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள் காந்தி நகர் பகுதியில் ஒரு வருடத்திற்கு மேலாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வந்துள்ளது. அந்த கட்டிடத்திற்கு பின்புறம் நகராட்சி கழிப்பிடம் ஒன்று 30 ஆண்டுகளாக செயல்படாமல் இருந்துள்ளது. கட்டுமான பணியின் போது, கழிவறை இடிந்து மண் சரிவு ஏற்பட்டது. இந்த விபத்தில் 6 பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். இடிபாடுகளில் சிக்கிய மற்ற தொழிலாளர்கள் 7க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு உதகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பாக கட்டட உரிமையாளர் பிரிட்ஜோ, ஒப்பந்ததாரர் பிரகாஷ், மேஸ்திரிகள் ஜாகீர் அகமது, ஆனந்த்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அனுமதிக்கு மாறாக கட்டப்பட்ட இந்த கட்டடத்திற்கு உதகை நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும், பணியாளர்கள் பாதுகாப்பின்றி கட்டுமானப் பணிகளை மேற்கொண்டதும் தெரியவந்துள்ளது.