அந்தமான் நிகோபர், செப்.29- அந்தமான் நிகோபர் தீவு களில் ஞாயிறன்று மிதமான நில நடுக்கம் ஏற்பட்டது. வங்கக்கடல் பகுதியில் அமைந்துள்ள அந்தமான் நிகோ பர் தீவுகளில் ஞாயிறன்று பிற்பகல் 2.32 மணியளவில் மிதமான நில நடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 4.8 புள்ளி களாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தின் மையம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இருந் தது. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக் கப்படவில்லை. மேலும் நிலநடுக் கத்தால், சேதம் எதுவும் ஏற்பட்ட தாக தகவல் இல்லை.