tamilnadu

img

இலங்கை குண்டுவெடிப்பில் வங்கதேச பிரதமரின் உறவினர் பலி

டாக்கா, ஏப்.24-வங்கதேசத்தில் ஆளும் அவாமி லீக் கட்சியின் மூத்த தலைவர் ஷேக் பஸ்லுல் கரீம் செலிம் என்பவரின் பேரன் ஜயான் சவுத்ரி (8) கொல்லப்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது. ஜயான் தனது தந்தை ஹேக் சவுத்ரியுடன் கொழும்பு நகரில் உள்ள ஆடம்பர ஓட்டலின் தரை தளத்தில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்தபொழுது குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்துள்ளது.இந்த தாக்குதல் சம்பவம் நடந்தபொழுது, அவனது இளைய சகோதரன் ஜோஹான் சவுத்ரி மற்றும் தாயார் ஷேக் அமீனா ஆகியோர் ஓட்டல் அறையில் இருந்துள்ளனர். செலிம், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் உறவினராவார். செலிமின் மருமகன் மஷியுல் இலங்கை மருத்துவமனை ஒன்றின் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு உள்ளார். அவரது நிலைமை தொடர்ந்து மோசமடைந்த நிலையிலேயே உள்ளது. 72 மணி நேரத்திற்கு பின்பே அவரது நிலை தெரிய வரும்.ஜயான் சவுத்ரி பலியான தகவலை ஷேக் செலிம் குடும்பத்தினர் உறுதிப்படுத்தி உள்ளனர். மேலும் ஜயான் சவுத்ரியின் உடல் வங்காளதேசம் கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

;