tamilnadu

img

நாமக்கல் மாவட்டத்தில் ஷவர்மாவுக்கு தடை!

நாமக்கல் மாவட்டத்தில் ஷவர்மா தயாரிக்க தடை விதித்து மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஐவின்ஸ் உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்டு 14 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். மேலும் 20 பேருக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, சம்மந்தப்பட்ட ஐவின்ஸ் உணவக உரிமையாளர் நவீன் குமார் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். மேலும், இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில், மாவட்டம் முழுவதும் உள்ள உணவகங்களில் ஷவர்மா தயாரிக்க தடை விதித்து மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அருண் உத்தரவிட்டுள்ளார்.