tamilnadu

img

ராசிபுரம் அருகே இரு சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை.... 6 பேர் போக்சோ சட்டத்தில் கைது

நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள அணைப்பாளையம் கிராமத்தில் இரு சிறுமிகளைப் பல மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக 75 வயது முதியவர் உட்பட 6 பேரை ராசிபுரம் மகளிர் காவல் நிலைய காவல்துறையினர் திங்கள்கிழமை கைது செய்துள்ளனர்.

ராசிபுரம் அருகேயுள்ளது அணைப்பாளையம் கிராமம். இக்கிராமத்தின் கள்ளுக்கடைமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு தாய், தனது கணவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்ட நிலையில், தனது 12 வயது, 13 வயது இரு மகள்களைக் கூலி வேலை செய்து வளர்த்து வருகிறார். இந்நிலையில் சிறுமிகளான இருவரையும் அதே பகுதியைச் சேர்ந்த பலர் தொடர்ந்து பல மாதங்களாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாகப் புகார்கள் வந்தது. அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் நாமக்கல் மாவட்ட குழந்தைகள் நலப்பாதுகாப்பு அலுவலருக்குத் தகவல் கொடுத்தனர். இதனை விசாரித்து குழந்தைகள் நல அலுவலர் ரஞ்சிதா, 75 வயது முதியவர் உட்படபலர் இரு சிறுமிகளையும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளதாக மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட ராசிபுரம் மகளிர் காவல் நிலையஆய்வாளர் பி.இந்திராவிற்கு, இந்த குற்றத்தில் பலர் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த சிவா (எ) சங்கர் (26), சண்முகம் (45), ஊமையன் (எ) முத்துசாமி (75), மணிகண்டன் (30), சூர்யா (23), செந்தமிழ்ச்செல்வன் (31) ஆகிய 6 பேர்போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். மேலும், இதில் சம்பந்தப்பட்ட பலர் குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.