நாமக்கல், அக்.17- மல்லசமுத்திரம் மேரிமேடு வாய்க்காலை ஒட்டி யுள்ள சாலையில் தேக்கமடைந்துள்ள குப்பை மற்றும் கழிவுகளை அகற்றுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்செங்கோடு வட்டம், மல்லசமுத்திரம் பேரூ ராட்சிக்குட்பட்ட மேரிமேடு பகுதியில் 150க்கும் அதிக மான குடியிருப்புகளில் 300க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சின்னஏரியில் இருந்து பெரியஏரிக்கு செல்லும் வாய்க்காலில் அதிகளவில் குப்பை மற்றும்கழிவுகள் தேக்கம டைந்து காணப்பட்டது. இதனால், பெரிய ஏரிக்கு தண்ணீர் வரத்து குறைந்துவிடும் என்ற நிலையில் அப்பகுதியை சேர்ந்தவர்கள் பொதுப்பணித் துறை அதிகாரிகளிடத்தில் முறையிட்டனர். இதையடுத்து வாய்க்காலில் இருந்த குப்பைகள் மற்றும் மண்ணை தூர்வாரினர். இதில் தூர் வாரிய கழிவுகளை வாய்க்காலின் ஓரத்தில் இருந்த சாலையிலேயே போட்டு விட்டு சென்றனர். இது வரையில் அக்கழிவுகள் அகற்றப்படவில்லை. தற்சமயம் மழைக்காலம் என்பதால், கழிவுகளில் இருந்து கடும் துர்நாற்றம் வீசிவருவதுடன், கொசுத் தொல்லையும் அதிகரித்துள்ளது. இதனால் இப்பகுதி யினருக்கு அதிகளவில் மர்ம காய்ச்சல் பரவிவரும் நிலையில் பெரும் அச்சமடைந்துள்ளனர். மேலும், இச்சாலையை கடந்துதான் மாணவர்கள் பள்ளிக்கு செல்லவேண்டும். துர்நாற்றம் வீசுவதால் வேறு பகுதி வழியாக சென்று வருகின்றனர். இதேபோல், தூர் வாரும் பணியின்போது, வாய்க்காலில் இருந்த குடிநீர் குழாயும் உடைந்துவிட்டது. இதனால் கடந்த இரண்டு வாரங்களாக இப்பகுதிமக்கள் குடிநீரின்றி அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, குப்பை மற்றும் கழிவுகளை உடனடியாக அகற்றப்பட வேண்டும். மேலும் உடைந்த குடிநீர் குழாயை சரி செய்ய வேண் டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.