நாமக்கல், பிப். 5- திருச்செங்கோடு வட்டம் போக்கலை கிராமத் தில் நிறுத்தப்பட்ட அரசு பேருந்தை தொடர்ந்து இயக்க வலியுறுத்தி கோரிக்கை மனு அளிக்கப் பட்டது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் இருந்து குமாரமங்கலம், மாணிக்கம்பாளையம், மாவுரெட்டிபட்டி,கோக்கலை பெரியமணலி வழி யாக கடந்த 40 வருடங்களாக 14 நெம்பர் அரசு பேருந்து இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இப்பேருந்து கடந்த இரண்டு வருடங்களாக இயக் கப்படுவதில்லை. இப்பேருந்தை மீண்டும் இயக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் பலமுறை முறை யிட்டும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக் கப்படவில்லை. இந்நிலையில் பேருந்தை தொடர்ந்த இயக்க வலியுறுத்தி திருச்செங்கோடு போக்குவரத்து கழக பணிமனை மேலாளரிடம், அப்பகுதியைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றிய கவுன்சிலர் சு.சுரேஷ், கோக்கலை ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் கே.கே.கிருஷ்ணமூர்த்தி, கோபால் ஆகியோர் கோரிக்கை மனுவினை அளித்தனர்.