tamilnadu

img

100 நாள் வேலை கேட்டு மனு

 நாமக்கல், ஜூன் 17- திருச்செங்கோடு வட்டம், மல்லசமுத்திரம் ஒன்றியம் சப்பையாபுரம் ஊராட்சியில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலை கேட்டு தொழிலாளர்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியத்திடம் மனு அளித்த னர். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், மல்லசமுத்திரம் ஒன்றியம் சப்பையாபுரம் ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் பிரதான தொழிலாக விவசாய கூலித்தொழிலில் இருந்து வருகிறது. இப்பகுதியில் வசித்து வரும் விவசாய கூலித் தொழிலாளர்களுக்கு தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் மூலம் கடந்த 2018 ஆம் ஆண்டு வரை வேலை வழங்கப்பட்டது. அதன் பின்னார் வேலை வழங்க வில்லை. இதுகுறித்து மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளரிடம் தொழிலாளர்கள் பலமுறை முறையிட்டபோது பதில் கூறாமல் வேலை வரும் என்று மட்டும் கூறி தட்டிக் கழித்து விட்டார். மேலும் வேலை செய்தவர்களுக்கு முறையாக கூலியை செலுத்தாமல் உள்ளனர். தற்போது 2019 ஆம் ஆண்டு துவங்கிய நாள் முதல் இப்பகுதியில் வசித்து வரும் 300க்கும் மேற்பட்ட தொழி லாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்காததால் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, கடுமையான வறட்சி ஏற்பட்டு சூழ்நிலையில் விவசாய தொழிலும் இல்லாத நிலையில் தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகள் வழங்க வேண்டும் என வலியுறுத்தி திங்களன்று 200க்கும் மேற்பட்டோர் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.