tamilnadu

நாமக்கல்லில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

நாமக்கல், ஜன. 20- நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சி யர் கா.மெகராஜ் தலைமையில் திங்களன்று நடை பெற்றது.     இக்கூட்டத்தில், பொதுமக்கள் முதியோர் உதவித் தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை  மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 190 மனுக்கள் பெறப்பட்டன. மனுக் களைப் பெற்று கொண்ட மாவட்ட ஆட்சியர் மனுக்களை பரிசீலினை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற் றின் மீது நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான நபர்க ளுக்கு நலத்திட்ட உதவிகளை உடனுக்குடன் வழங்கிட வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி, தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்புத்திட்டம் எஸ்.என்.பாலசுப்பிரமணியன் உட்பட அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

;