திருச்செங்கோட்டில் ரூ.15 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம்
நாமக்கல், டிச. 22- திருச்செங்கோடு வேளாண்மை கூட்டு றவு சங்கத்தில் சனியன்று ரூ.15 லட்சது திற்கு மஞ்சள் ஏலம் நடை பெற்றது. திருச்செங்கோடு வேளான் உற்பத்தியா ளர்கள் கூட்டுறவு சங்கத்தில் வாரந்தோறும் சனியன்று மஞ்சள் ஏலம் நடை பெறுகிறது. இந்த ஏலத்துக்கு ஆத்தூர், கெங்கவல்லி, கூகையூர், கள்ளக்குறிச்சி, பொம்மிடி, அரூர், ஜோடர்பாளையம், பரமத்தி வேலூர், நாமக்கல், மேட்டூர், பூலாம்பட்டி ஆகிய பகு திகளைச் சேர்ந்த விவசாயிகள் 414 மஞ்சள் மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். ஈரோடு, ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, சேலம் ஆகிய பகுதிகளிலிருந்து 30க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மஞ்சளை கொளு முதல் செய்ய வந்திருந்தனர். விவசாயிகள் முன்னிலையில் அதிகாரிகள் ஏலத்தை நடத்தினர். இதில், விரலி மஞ்சள் குவிண் டால் ரூ.6,189 முதல் ரூ.7,069 வரையும், கிழங்கு மஞ்சள் குவிண்டால் ரூ.5,119 முதல் ரூ.6,509 வரையும் விற்பனையானது.
மஞ்சள் மார்க்கெட்டுக்கு 2 நாள் விடுமுறை
ஈரோடு, டிச. 22- ஈரோடு, பெருந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடம் மற்றும் கோபி சொசைட் டிகளுக்கு இரண்டு நாள் விடுமுறை அறி விக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த மஞ்சளை ஈரோடு, பெருந்தறை மற்றும் கோபியில் உள்ள ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்க ளில் ஏல முறையில் விற்பனை செய்து வருகின்றனர். இந்த மஞ்சள் மார்க்கெட்டு கள் திங்கள் முதல் வெள்ளி வரை செயல் படும். இந்நிலையில் கிறிஸ்துமஸ், அனுமன் ஜெயந்தி மற்றும் வளைய சூரிய கிரகணம் நிகழ்வதையொட்டி வரு கிற டிச.25, 26 ஆகிய 2 நாட்கள் மாவட் டத்தில் உள்ள மஞ்சள் மார்க்கெட்டுகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அது சம யம் எந்த ஒரு ஏலமும், விற்பனையும் இருக் காது என ஈரோடு மஞ்சள் வணிகர்கள் கிடங்கு நிர்வாகம் அறிவித்துள்ளது. அதேச மயம் ஊரக உள்ளாட்சி தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு 27 ஆம் தேதி விடு முறையின்றி வழக்கம் போல் வர்த்தகம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.