tamilnadu

img

கால்நடை மருத்துவரை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

நாமக்கல், ஜூலை 20- எலச்சிபாளையம் கால்நடை மருத்துவரை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையத்தில் செயல்பட்டு வரும் கால் நடை மருத்துமனைக்கு மனு கொடுக்க வரும் நபர்களிடம் வாக்கு வாதம் செய்து மனுக்களைப் பெற தவிர்க் கும் மருத்துவரை கண்டித்தும், மருத்துவ மனைக்கு வரும் விவசாயிகளிடம் பணம் கேட்பதை தடுக்க வேண்டும்.  

கால்நடை மருத்துவமனைக்கு தேவையான போதிய மருந்துகளை மாவட்ட நிர்வாகம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆடு, மாடுகளுடன் எலச்சிபாளையத்தில் மார்க் சிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர்.

இதில், ஒன்றியச் செயலாளர் சு.சுரேஷ், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பி.சுரேஷ், கே.எஸ். வெங்கடாசலம், ரமேஷ், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு இயக்குனர் பி.மாரிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;