நாமக்கல், ஜூன் 7- நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந் திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட விளை யாட்டு மைதானத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல் வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியா னது மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி மற்றும் சமூகநலன் மற்றும் சத்துணவுத்திட்டத்துறை அமைச் சர் வெ.சரோஜா ஆகியோர் மாற்றுத்திறனாளி களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி னார்கள். மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் செயல்பட்டு வரும் ஆரம்ப கால பயிற்சி மையங் களில் பயிற்சி பெற்றுவரும், மூளை முடக்குவாதத் தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறன் கொண்ட குழந் தைகள் அன்றாட பயிற்சிகளில் ஈடுபடுவதில் உள்ள சிரமங்களை போக்கி அவர்கள் சரியாகவும், வசதி யாகவும் அமர்ந்து கொள்ள ஏதுவாகவும், அவர்களின் முதுகு பகுதிகளை நேராக கால்களை சரியான அமர்வு நிலையில் வைத்துக்கொள்ளவும் உதவும் சிறப்பு நாற் காலிகளை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகின் றது. இத்திட்டத்தின் கீழ் 14 மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு சிறப்பு நாற்காலிகளை அமைச்சர் பெருமக்கள் வழங்கினார்கள்.