tamilnadu

img

காவிரி ஆற்றில் மூழ்கி 6 பேர் மரணம்

காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற 6 பேர் சுழலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே பொத்தனூர் பகுதியில் காவிரி ஆற்றில் புகைப்படக்கலைஞர் சரவணன் என்பவர் தனது குடும்பத்துடன் குளிக்க வந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட சுழலில் சிக்கி சரவணன், அவருடைய மனைவி, 2 மகள்கள், மற்றும் பக்கத்து வீட்டு சிறுவர்கள் இருவரும் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழந்த 3 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் 3பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


;