tamilnadu

img

மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தை அராஜகமான முறையில் ஒடுக்கும் காவல்துறை

நாகர் கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகளை காவல்துறையினர் அராஜகமாக முறையில் கைது செய்தனர். 
அகஸ்தீஸ்வரத்தில் உள்ள அரசு உதவி பெறும் விவேகானந்தா கல்லூரி நிர்வாகத்தினர் ஒருவருக்கொருவர் பகைமை தீர்க்க மாற்றுத்திறனாளி ஊழியர் சதீஷ் குமாரை  பழிவாங்கும் வகையில் செயல்பட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து நிர்வாகத்தினரின் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்க வலியுறுத்தி  நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகள் சங்கம் சார்பில் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அங்கு வந்த காவல் துறையினர் அராஜகமான முறையில் கைது செய்தனர்.