tamilnadu

img

ஆய்மூர் கிராமத்தில் நான்குவழி தேசிய நெடுஞ்சாலையை வேறு வழியில் மாற்றக் கோரி போராட்டம்.

ஆய்மூர் கிராமத்தில் நான்குவழி தேசிய நெடுஞ்சாலையை வேறு வழியில் மாற்றக் கோரி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த ஆய்மூர் கிராமத்தில் நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை அமைக்க ஒன்றிய அரசு முடிவு செய்து கற்கள் நடப்பட்டு பணிகள் விரைவில் தொடங்க உள்ளது . இந்த நிலையில் அந்த கிராமத்தில் நான்கு வழிச்சாலை தேசிய  தொடங்கினால் விவசாய நிலங்கள் மற்றும் மாடி கூரை வீடுகள் அளிக்கப்பட கூடிய சூழ்நிலை ஏற்படும் என்பதால் நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையை வேறு வழியில் மாற்றக்கோரி அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்