நீலகிரி,ஆக.02- பிணந்தின்னி கழுகுகளை பாதுகாக்கும் வகையில் தென்னிந்தியாவின் முதல் இனப்பெருக்க மையம் முதுமலையில் அமைய உள்ளது. கொள்ளை நோயால் பாதிக்கப்பட்டு விலங்கினங்கள் இறந்தாலும் அந்த சடலத்தை உண்டு செரித்து மற்ற உயிர் களுக்கு நோய் பரவாமல் தடுக்கும் அசாத்திய திறன் கொண்டது இவ்வகை கழுகுகள். கால்நடைகளுக்கு பயன்படுத்தப்படும் டைக்ளோ பினேக் எனப்படும் வலிநீக்கி மருந்து, பிணந்தின்னி கழுகுகளின் அழிவுக்கு காரணமாக அமைந்தது. இதுகுறித்து முதுமலை புலிகள் காப்பக வெளி மண்டல துணை இயக்குநர் ஸ்ரீகாந்த் கூறுகையில், சீகூர் பகுதியை பிணந்தின்னி கழுகுகள் வாழிடமாக கொண்டுள்ளன. இவற்றுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்கப்பட்டு வருகிறது. இவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்க பாறு கழுகு களின் இனப்பெருக்க மையம் ஒன்றை உருவாக்கத் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் பாறு கழுகுகளை பாதுகாக்க பெரும் உதவியாக இருக்கும் என்றார். முட்டை களை அடை வைத்து குஞ்சு பொரித்ததும் வனத்தில் விடவும், கூட்டில் இருந்து தவறி விழும் குஞ்சுகளை மீட்டு சிகிச்சை அளிக்கவும் வாய்ப்பாக அமையும். தென்னிந்தியாவில் பிணந்தின்னி கழுகுகளுக்கு இன விருத்தி மையம் உருவாக்கப்படவுள்ளது இதுவே முதல்முறை என்று தெரிவித்தார்.