tamilnadu

திருவனந்தபுரம், பாலா , நாகர்கோவில் முக்கிய செய்திகள்

இஸ்ரோ தலைவர் டாக்டர் கே.சிவனுக்கு ஸ்ரீசித்திரத் திருநாள் விருது
திருவனந்தபுரம், செப்.22- ஸ்ரீ சித்திரத் திருநாள் மன்னரின் நினைவைப் போற்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ஸ்ரீ சித்திரத் திருநாள் டிரஸ்ட், ஸ்ரீ சித்திரத் திருநாள் தேசிய விருதை ஒவ்வொரு ஆண்டும் வழங்கிவருகிறது. 2006ஆம் ஆண்டு முதல் விருது வழங்கப்பட்டு வருகிறது. அறிவியல், தொழில்நுட்பம், இலக்கியம், கலை, மருத்துவம், சினிமா, பொது அரசியல் ஆகிய துறைகளின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை புரிந்த பிரபலமானவர்களில் ஒருவரைத் தேர்வு செய்து விருது வழங்கப்படுகிறது. ஸ்ரீ சித்திரத் திருநாள் தேசிய விருது மூன்று லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் பாராட்டுப் பத்திரமும் அடங்கியதாகும். இந்த ஆண்டுக்கான விருது இஸ்ரோ தலைவர் டாக்டர் கே.சிவனுக்கு வழங்கப்படவுள்ளது. டிரஸ்ட் தலைவர் டி.பி. சீனிவாசன், முன்னாள் அமைச்சர் சுரேந்திரன் பிள்ளை, ஏசியா நெட் செய்தி ஆசிரியர் எம்.ஜி.ராதாகிருஷ்ணன், மேனேஜிங் டிரஸ்டி டி.சதீஷ்குமார், ஸ்ரீ சித்திரத் திரு நாள் பள்ளி முதல்வர் எஸ்.புஷ்பவல்லி ஆகியோர் அடங்கிய தேர்வுக்குழு இஸ்ரோ தலைவர் டாக்டர் கே.சிவனை ஒரு மனதாக தேர்வு செய்துள்ளது.  இந்திய விண்வெளி ஆராய்ச்சி மற்றும் விஞ்ஞானத் துறையில் பெருமைமிகு சாதனைகளைச் செய்து கொண்டி ருக்கும் இஸ்ரோ தலைவர் என்ற நிலையிலும் மற்றும் அவரது தனிப்பட்ட சாதனைகளுக்காகவும் டாக்டர் கே. சிவனுக்கு விருது வழங்கப்படுவதாகத் தேர்வுக்குழு அறி வித்துள்ளது.

பாலா தொகுதியில் இன்று வாக்குப்பதிவு தயார் நிலையில் 176 வாக்குசாவடிகள்
பாலா, செப்.22- கேரளத்தில் உள்ள பாலா சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் திங்களன்று (செப்.23) நடைபெறுகிறது. 2016 சட்டமன்ற பொதுத் தேர்தலில் யுடிஎப் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கேரள காங்கிரஸ் தலைவர் கே.எம்.மாணி மறைவைத் தொடர்ந்து இங்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. மும்முனைப்போட்டி நடைபெறும் இத்தொகுதியில் எல்டிஎப் சார்பில் தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் மாணி சி காப்பனும், யுடிஎப் சார்பில் கேரள காங்கிரஸ் நிறுத்தியுள்ள சுயேச்சை வேட்பா ளர் ஜோஸ் டோமும், பாஜகவின் என்.ஹரி உட்பட 13 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 176 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு இயந்திரங்கள் உட்பட தேர்தலுக்கான தளவாடங்களை கார்மல் பப்ளிக் பள்ளியிலிருந்து பெற்றுக் கொண்ட வாக்குப்பதிவு அலுவலர்கள் அந்தந்த மையங்க ளுக்கு வந்துள்ளனர். திங்களன்று காலை 6 மணிக்கு தேர்தல் முகவர்கள், அதிகாரிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப் பதிவு நடைபெறும். தொடர்ந்து 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கும். மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடை பெறும்.  தேர்தலுக்காக பல்வேறு நிலைகளில் சுமார் 1200 அரசு ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அமைதியாக தேர்தலை நடத்த மத்திய படை உட்பட 700 பேர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த தொகுதியில் 87,729 ஆண்கள் 91,372 பெண்கள் என மொத்தம் 1,79,107 வாக்கா ளர்கள் உள்ளனர்.

சொகுசு பேருந்து மீது கல்வீச்சு; பணம் பறிப்பு ஆறு பேர் மீது வழக்கு பதிவு
நாகர்கோவில், செப்.22- குமரி மாவட்டம், மாஞ்சறவிளையை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (30). இவர், வெள்ளியன்று கருங்கல் சுண்ட விளை பகுதியில் கேரள பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்தை ஓட்டி சென்றார். அப்போது 3 இருசக்கர வாக னத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் பேருந்தை வழி மறித்து முன்பக்க கண்ணாடியில் கல் எறிந்தனர். தொடர்ந்து சுந்தர்ராஜையும் கல்லால் தாக்கினர். மேலும் அவரது பாக்கெட்டில் இருந்த ரூ.27 ஆயிரத்து 500 ஐ பறித்து விட்டு தப்பி சென்றனர். கல்லால் தாக்கியதில் பேருந்தில் ரூ.15 ஆயி ரம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன. இது குறித்து சுந்தர்ராஜ் கருங்கல் காவல் நிலை யத்தில் புகார் அளித்தார். விசாரணை நடத்திய காவல் துறையினர், கிள்ளியூரை சேர்ந்த சஜின் (28), குளச்சல் பகுதியை சேர்ந்த சீலன் (39), ஆன்றனி (28), இலவுவிளை யை சேர்ந்த அஸ்வின் (27) உள்பட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதில் சஜின், ராஜகுமார், சீலன், அஸ்வின் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கல்லால் தாக்குதலுக்கு உள்ளான பேருந்து ஓட்டுநர் கருங்கல் அரசு மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வருகிறார்.