tamilnadu

img

14 மாத நிலுவை சம்பளம் உடனே வழங்குக ! பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், ஆக.26- பிஎஸ்என்எல் நிர்வாகத்தில் பணிபுரியும் தொழிலாளர்க ளுக்கு நாகர்கோவில் பகுதி யில்14 மாதங்களாக நிலுவையில் உள்ள சம்பளத்தை உடனே வழங்க வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களை வேலையில் இருந்து வெளியேற்றக்கூடாது, இபிஎப், இஎஸ்ஐ சட்டப்பூர்வ மான சலுகைகளை முறையாக அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம் மற்றும் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் சார்பில் நாகர்கோவில் பிஎஸ்என்எல் பொதுமேலாளர் அலுவலகம் முன்பு செவ்வா யன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு, ஒப்பந்த தொழிலாளர் சங்க மாவட்ட தலை வர் சுயம்புலிங்கம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் செல்வம், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஜார்ஜ், மாவட்ட செயலாளர் பி.ராஜூ, மாவட்ட பொருளாளர் ஆறு முகம், மாநில அமைப்பு செயலா ளர் அனில் குமார், அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வு பெற்ற ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.