நாகர்கோவிலில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 8-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த அப்பள்ளி ஆசிரியர் ராமச்சந்திர சோனி கைது செய்யப்பட்டுள்ளார்.
நாகர்கோயிலில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 8-ஆம் வகுப்பு மாணவி ஒருவர், ஆசிரியர் ராம்ச்சந்திர சோனி தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளார். இது குறித்து அவர் உடனடியாக விசாரணையை நடத்தி, சோனியை இடைநீக்கம் செய்துள்ளார். இதையடுத்து தலைமை ஆசிரியர், மாவட்ட குழந்தைகள் நல அலுவலரிடம் அளித்த புகாரின் பேரில், நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ராஜஸ்தானை சேர்ந்த ஆசிரியர் ராமச்சந்திர சோனி மீது போக்சோ உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.