tamilnadu

கொள்ளிடம் ஆற்றில் தொடரும் மணல் கொள்ளை பணத்திற்காக கடத்தலில் ஈடுபடும் இளைஞர்கள்

சீர்காழி, ஜூலை 29- நாகை கொள்ளிடம் ஆற்றிலிருந்து மணல் கொள்ளை போவதை தடுத்து நிறுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே ஆற்றின் கரையோரம் உள்ள அளக்குடி, திட்டுப்படுகை, சந்தப் படுகை, சரஸ்வதிவிளாகம், கொன்னக் காட்டுப்படுகை உள்ளிட்ட கிராமங்க ளில் தினந்தோறும் இரவு மற்றும் பகல் நேரங்களில் மணல் கொள்ளை தொட ர்ந்து கொண்டே தான் இருக்கிறது.  இரவு நேரங்களில் டிராக்டர்கள் மற்றும் டயர் வண்டிகள் ஆற்றுக்குள் விதிக்குப் புறம்பாகச் சென்று மணல் எடுத்து வருகின்றன. இதனை அதிகாரி கள் ஆரம்ப கட்டத்தில் கட்டுப்படுத்தி னர். பல டிராக்டர்கள் மற்றும் டயர் வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட் டன. இருந்தும் சில அதிகாரிகள் உதவி யுடன் மணல் கொள்ளை நடைபெற்று கொண்டேயிருக்கிறது. மணல் திருட்டில் ஆற்றின் கரை யோரமுள்ள சில படித்த இளைஞர் களும் ஈடுபட்டு வருகின்றனர் என்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. சமீப காலங்களில் குறைந்த எண்ணிக்கை யில் டிராக்டர்கள் மற்றும் டயர் வண்டி கள் ஆற்றுக்குள் சென்று மணல் அள்ளு வதில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. கரையோர கிராமங்களைச் சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட இளைஞர்களும் இரவு மற்றும் பகல் நேரங்களில் இரு சக்கர வாகனத்தில் கொள்ளிடம் ஆற் றுக்குள் சென்று ஒரு பைக்கில் 4 முதல் 7 வரையிலான சாக்கு மூட்டைகளை ஏற்றி வந்து உரிய இடத்தில் செலுத்த வேண்டும். இதற்கு இடைத்தரகர்களும் வியாபாரிகளும் இருந்து செயல்பட்டு வருகின்றனர். ஒரு சிமெண்ட் சாக்கு மணல் மூட்டையில் ஆற்றிலிருந்து சுற்றுப்புறத் தில் 5 கி.மீ. தொலைவில் விரும்பும் இடத்திற்கு எடுத்துச் சென்று ஒப்ப டைக்க ரூ.60 முதல் ரூ100 வரை பெறு கின்றனர். டிராக்டர் மற்றும் மாட்டு வண்டிகளில் உரிய இடத்திற்கு எடுத்துச் செல்லும் போது அதிகாரி களால் பிடிக்கப்பட்டு தண்டனைக்கு உள்ளாகின்றனர். ஆனால் இரு சக்கர வாகனங்களில் மணல் கொள்ளை வெகு ஜோராக நடைபெற்று வருகிறது. இந்தத் தொழிலில் விதிக்குப் புறம்பாக இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதில் இடைத்தரகர்கள் மற்றும் பல வியாபாரிகளும் ஈடுபட்டு வருகின்றனர். எனவே இதனைத் தடுக்கும் வகை யில் அரசு மணல் குவாரியை கொள்ளி டம் பகுதியில் திறப்பது ஒன்றே சரி யான வழி என்று சமூக ஆர்வலர்களும் விவசாயிகளும் கருத்து தெரிவிக்கின்ற னர். போதிய மணல் கிடைக்காததால் பல ஆயிரக்கணக்கான அரசின் கான்கி ரீட் வீடுகள் கட்டும் பணி அப்படியே நிறுத்தப்பட்டுள்ளது. எனவே இளை ஞர்களின் எதிர்கால வாழ்க்கையை சீரழித்து வரும் மணல் கொள்ளை சம்ப வத்தை தடுத்து நிறுத்தும் வகையில் மணல் குவாரியை அரசு திறந்து அள வுக்கு அதிகமாக எடுக்காமல் குறைந்த அளவு மணல் மட்டுமே எடுத்து ஆற்றை யும் முறையாக பாதுகாக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.