நாகப்பட்டினம், ஆக.10- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, சிபிஐ பொதுச் செயலாளர் து.ராஜா ஆகியோரை கைது செய்ததைக் கண்டித்து கட்சியின் நாகை மாவட்டம் கீழ்வேளுர் ஒன்றியம் தேவூர்க் கடைத்தெருவில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் ஜி.ஜெயராமன் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் என்.எம். அபுபக்கர், ஆர்.கிருஷ்ணமூர்த்தி, ஏ.சிவகுமார், எஸ்.மோகன் இங்கர்சால், டி.துரைராஜ், வி.செல்வராஜ் உள்ளிட்டோர் உரையாற்றினர். கீழையூர் ஒன்றியம் மேலப்பிடாகைக் கடைத்தெருவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் எம்.முருகையன் தலைமையேற்றார். கே.சித்தார்த்தன், கே.கிருஷ்ணன், டி.வெங்கட்ராமன், பி.ராமலிங்கம், உமாநாத், ஏ.முருகையன், பி.பன்னீர்செல்வம், ஏ.பாலசுப்பிர மணியன், ரவி, எஸ்.அன்பழகன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.
திருச்சிராப்பள்ளி திருச்சி புறநகர் மாவட்டக்குழு சார்பில் 8 மையங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. லால்குடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ஜெகதீசன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சந்திரன், புள்ளம்பாடி ஒன்றிய செயலாளர் ரஜினிகாந்த் ஆகியோர் கண்டன உரையாற்றினர். முசிறியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் நல்லுசாமி தலைமை வகித்தார். ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கிருஷ்ணன், ராஜா ஆகியோர் கண்டன உரையாற்றினர். துறையூரில் ஒன்றிய செயலாளர் ஆனந்தன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தா.பேட்டை ஆர்ப்பாட்டத்திற்கு காமராஜ் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் சுப்ரமணியன், முருகேசன், சேகர், வீரவிஜயன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். உப்பிலியபுரம் எரக்குடி கடைவீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் தலைமை வகித்தார். பாலு, கணேசன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மணப்பாறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் வட்ட செயலாளர் ராஜகோபால் தலைமை வகித்தார். சிபிஐ நகர செயலாளர் உசேன், மாவட்ட துணை செயலாளர் பழனிசாமி ஆகியோர் கண்டன உரையாற்றினர். சிபிஎம் வட்டக்குழு உறுப்பினர்கள் கண்ணன், சீனிவாசன், பாலு, கோபாலகிருஷ்ணன், ஷாஜகான், முத்துசாமி, சுரேஷ், தங்கராஜ், சரஸ்வதி ராஜாமணி, சிஐடியு ஆட்டோ ஊழியர் சங்க மாவட்ட தலைவர் நவமணி, சிபிஐ நகரக்குழு உறுப்பினர்கள் திருநாவுகரசு, பெருமாள், சவுகத்அலி கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு
திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் திராவிடமணி ஆகியோர் தலைமை தாங்கி பேசினர். அப்போது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்தி காவல்துறையினர் கைது செய்தனர். கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக்குழு உறுப்பினர்கள், பகுதி செயலாளர்கள் மற்றும் கட்சி உறுப்பினர் உள்பட 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஒரத்தநாடு
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பேருந்து நிலையம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர்கள் சுரேஷ்குமார்(சிபிஎம்), சீனி முருகையன் (சிபிஐ) தலைமை வகித்தனர். இதில் 50-க்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட் கட்சிகளின் தொண்டர்கள் கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டனர்.