தரங்கம்பாடி, நவ.27- நாகப்பட்டினம் மாவட்டம் பூம்பு காரில் மீன் வளத்தை பாதுகாப்பது குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு முகாமில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற தரங்கம்பாடி பிஷப் ஜான்சன் நினைவு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. உலக மீன்வள தினத்தையொட்டி மீன் வளத்தை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு முகாம் பூம்புகாரில் நடைபெற்றது. இதில் கடலோரப் பகுதி யில் உள்ள பள்ளிகளை சேர்ந்த மாண வர்கள் கலந்துகொண்டு மீன் வளத்தை பாதுகாப்பது குறித்த பேச்சு போட்டி, கட்டுரை போட்டி மற்றும் ஓவியப் போட்டிகளில் கலந்து கொண்டனர். இந்த போட்டிகளில் தரங்கம்பாடி பிஷப் ஜான்சன் நினைவு மேல் நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இப்பள்ளியின் 8ஆம் வகுப்பை சேர்ந்த மாணவன் மாதேஷ் ஓவிய போட்டியில் முதலிடமும் 8ஆம் வகுப்பை சேர்ந்த மாணவன் தேவேந்தி ரன் பேச்சு போட்டியில் முதலிடமும் பெற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாண வர்களுக்கு மீன்வளத்துறை மற்றும் லயன்ஸ் சங்கம் சார்பில் கேடயம், சான்றிதழ் மற்றும் ரொக்கப்பணம் வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்க ளுக்கும் மற்றும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்த தமிழாசிரியர் ஜாஸ்மின், ஓவிய ஆசிரியர் அருண் ஆகியோரை பள்ளி தாளாளர் இன்ப ராஜ், தலைமையாசிரியர் ஜான் சைமன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.