தரங்கம்பாடி செப்.29- நாகை மாவட்டம் பொறையாரில் உள்ள தரங்கை பேராயர் மாணிக்கம் லுத்தரன் கல்லூரியில் பெண்கள் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம் கல்லூரி முதல்வர் ஜீன் ஜார்ஜ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர் மார்ட்டின் சாந்தோம் இந்திய சட்டமும், நவீன பெண்களும் என்ற தலைப்பில் பெண்கள் பாதுகாப்பு குறித்து மாணவர்களிடையே கலந்துரையாடினார். நிகழ்ச்சியில் அனைத்து துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பெண்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், ஆங்கிலத்துறை உதவிப் பேராசிரியர் மதுமிதஸ்ரீ நன்றி கூறினார்.