தரங்கம்பாடி, டிச.5- நாகை மாவட்டம், தரங்கம்பாடியில் வணிகம் செய்வதற்காக டென்மார்க் நாட்டி னர்(டேனிஷ்காரர்கள்) 1620-ம் ஆண்டு தரங் கம்பாடி வந்தனர். அவர்கள் வருகையின் 400 ஆவது ஆண்டு விழா அடுத்த ஆண்டு (2020) செப்டம்பர் மாதம் 12, 13-ம் தேதிக ளில் தரங்கம்பாடியில் நடக்கிறது. அதையொட்டி டென்மார்க் நாட்டில் உள்ள தரங்கம்பாடி நலச் சங்கத்தின் சார்பில் புகைப்பட கண்காட்சி தரங்கம் பாடி டேனிஷ் கலாச்சார மையத்தில் புத னன்று துவங்கப்பட்டது. சங்கத்தின் தலை வர் பால்பீட்டர்சன் கண்காட்சியை துவக்கி வைத்தார். விழா குறித்த கையேடுகளை தெரசா மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை கருணாஜோசபாத், சுல்தான், சீகன்பால்கு அருங்காட்சியக காப்பாட்சியர் ஜாஸ்மீன் எப்பர்ட், ஓய்வு பெற்ற பேராசிரியர் மரியலாசர், சீகன்பால்கு ஆன்மீக மன்ற செயலாளர் ஜஸ்டின் உள்ளிட்டோருக்கு வழங்கி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: 1618-ம் ஆண்டு டேனிஷ் கடற்படை தளபதி ஓவ் ஜெடியின் தலைமையில் 5 பாய்மரக் கப்பல் கள் மூலம் டென்மார்க் எல்சினோர் துறை முகத்தில் இருந்து இந்தியாவிற்கு புறப்பட்டு 2 ஆண்டு பயணத்திற்கு பின் 1620-இல் தரங்கம்பாடிக்கு வந்தனர். அவர்கள் இந்தியாவிற்கு புறப்பட்ட 400-ஆவது ஆண்டு விழாவை டென் மார்க்கில் சிறப்பாக கொண்டாடினோம். அந்த விழாவில் பங்கேற்க பள்ளி மாணவி கள் சிலரை டென்மார்க் அழைத்துச் சென்றோம். தரங்கம்பாடி வந்த 400 ஆவது ஆண்டு விழாவை 2020 செப்டம்பர் மாதம் 12,13 தேதிகளில் சிறப்பாக கொண்டாட முடிவு செய்துள்ளோம். விழாவின் முதல் கட்டமாக டென்மார்க் நாட்டை குறித்த புகைப்பட கண்காட்சி திறந்துள்ளோம். டென்மார்க் நாட்டில் உள்ள தரங்கம்பாடி நலச் சங்கத்தின் சார்பில் நடைபெறும் விழாவில் பள்ளி, கல்லூரிகள், பல்வேறு கலாச்சார அமைப்புகள், அரசு சாரா நற்பணிக் குழுக்கள், அரசு அதிகாரி கள் மற்றும் பல்வேறு தலைவர்களை அழைக்க ஏற்பாடு செய்து வருகிறோம். டென்மார்க் நாட்டினர் வியாபார நோக்கில் தான் இந்தியாவிற்கு வந்தார் கள். இந்தியாவுடன் சண்டை போடும் எண்ணம் அவர்களுக்கு ஒரு போதும் இல்லை. இந்தியாவுடன் நட்புறவோடு பழகி வந்தார்கள். அந்த நட்புறவு காலங்கால மாக தொடரும். 1826ல் தொடங்கப்பட்ட தரங் கம்பாடி- மயிலாடுதுறை ரயில் போக்கு வரத்தை 1986ல் நிறுத்தப்பட்டது. அந்த ரயில் போக்குவரத்து அடுத்த ஆண்டு எங்கள் விழாவிற்குள் கொண்டு வந்தால் மகிழ்ச்சி அடைவோம். இது குறித்து நாங்களும் தரங்கம்பாடி நலச்சங்கத்தின் சார்பில் கோரிக்கை மனு அனுப்பியுள்ளோம் என்று பேசினார். விழாவில் டென்மார்க் நாட்டு பிரதிநிதி கள் குனுட்ஸ் ஷெல்லஸ், அன்னிடார்தி, ஓவன்எதிர்க் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். இந்திய- டேனிஷ் கலாச்சார மையப் பொறுப்பாளர் சங்கர் நன்றி கூறினார்.