தரங்கம்பாடி, செப்.24- நாகை மாவட்டம் தரங்கம்பாடி வட் டம், எடுத்துக்கட்டி கிராமத்தில் 40 க்கும் மேற்பட்ட முதியவர்களின் உதவித் தொகையை நிறுத்தி வைத்துள்ளதால் கடந்த 2 மாதங்களாக அன்றாட உண வுக்கே வழியின்றி தவிப்பதாக பாதிக் கப்பட்ட வயதானவர்கள் செவ்வா யன்று மனுக்களோடு தரங்கம்பாடி வட் டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். இது குறித்து எடுத்துக்கட்டி ஊராட்சி யின் முன்னாள் ஊராட்சி தலைவரும், முதியோர் பாதுகாப்புக்குழு தொடர்பா ளருமான மனோகரன் கூறும்போது, எடுத்துக்கட்டி கிராமத்தில் முதியோர் கள், மாற்றுத்திறனாளிகள், விதவை கள் என 350 பேருக்கு மாதந்தோறும் உதவித்தொகை கிடைத்து வந்தது. இந்நிலையில் கடந்த 2 மாதங்க ளாக 40 பேருக்கு திடீரென எந்தவித அறிவிப்பும், விசாரணையுமின்றி உத வித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது. தரங்கம்பாடி வட்ட சமூக பாதுகாப்பு தனி வட்டாட்சியர், அலுவலகத்தில் தொடர்ச்சியாக இருப்பதே இல்லை. அவருக்கு வேண்டிய நபர்களுக்கு, ஆயிரக்கணக்கில் பணத்தைப் பெற்றுக் கொண்டு உதவித்தொகை வழங்கு கிறார் என்ற குற்றச்சாட்டு பரவலாக பேசப்படுகிறது என்றும், வட்டாட்சியரி டம் மனு அளித்தப் பிறகும் நட வடிக்கை இல்லையென்றால் போராட் டத்தில் ஈடுபடுவோம் என மனோகரன் கூறினார். கடந்த 2 மாதங்களாக உதவித் தொகை இல்லாததால் அன்றாடம் உண வுக்கே வழியின்றி பிறரிடம் கையேந் தும் நிலைமைக்கு வந்து விட்டதாக கணவர், பிள்ளைகள் யாருமே இல்லா மல் ஆதரவின்றி உள்ள வயது முதிர்ந்த சரோஜா, அஞ்சம்மாள் ஆகியோர் கண்ணீர் மல்க கூறினர். ஆதரவின்றி வாழ்க்கையை நடத்துபவர்களுக்காக அரசு வழங்கும் உதவித்தொகையை தங்களிடம் அதிகாரம் இருப்பதால் தகுதி இல்லாத நபர்களுக்கு கை யூட்டு வாங்கிக் கொண்டு உதவித் தொகையை அளிக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, பாதிக் கப்பட்டுள்ள முதியோர்களின் கண் ணீரை துடைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்குமா?